மகளை தூண்டிலாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் பறித்த பெற்றோர்..!

Published by
murugan

பெங்களூர் மாநிலத்தைச் சேர்ந்த லீனா கவிதா இவரது கணவர் பிரமோத் குமார் இவர்களுக்கு 21 வயதில் ஒரு மகன் உள்ளார். இவரது மகள் ஆன்லைன் மூலமாக இளம் மருத்துவரை சந்தித்து உள்ளார். ஆரம்பத்தில் நட்பாக இருவரும் பழகியுள்ளனர்.
பின்னர் இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இருவரும் ஒரு முறை ஒரு விடுதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை இந்த அப்பெண்ணின் பெற்றோர் தெரிந்து விடுதிக்கு வந்து இருவரையும் பிடித்தனர். பின்னர் அந்த மருத்துவரின் பெற்றோர் முகவரி எண்களை வாங்கிக் கொண்டு  தங்கள் மகளை அங்கு இருந்து அழைத்து சென்றனர்.
சிறிது நாட்களுக்கு பிறகு அப்பெண்ணின் பெற்றோர் அந்த மருத்துவரின் தாயார் ஆஷலதாவிற்கு போன் செய்து என் மகளுடன் உங்கள் மகன் நெருக்கமாக இருக்கும் வீடியோ உள்ளது எனவே ஒரு கோடி கொடுத்தால் இந்த பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
அப்படி இல்லையென்றால் இந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிடுவேன் மேலும் உங்கள் மகன் மீது போலீசில் புகார் அளிப்பேன் என லீனா கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆஷலதா ,லீனா தம்பதி  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களுடைய மகள் கர்ப்பமாக உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
உடனே ஆஷலதா ரூ.20 லட்சத்திற்கு காசோலை கொடுத்துள்ளார். பின்னர் அடுத்த மறுநாள் மீண்டும் போன் செய்து கர்ப்பத்தை கலைக்க வேண்டும் எனக் கூறி பணம் கேட்டுள்ளனர். உடனே ஆஷலதா ரூ.20 லட்சத்தை பணம் பரிமாற்றம் செய்துள்ளார். அதன் பிறகு தொடர்ந்து இடைவிடாது லீனா தம்பதி ஐந்து மாதங்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஆஷலதா போலீசாரிடம்  புகார் கொடுத்து உள்ளார். போலீசார்  வழக்கு பதிவு செய்து லீனா அவரது கணவர் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

6 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

3 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

4 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

6 hours ago