மகாராஷ்டிராவில் மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் கூடிய வழிகாட்டு நெறிமுறை வரும் என்று எதிரிபார்க்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில் மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் அளிப்பதற்கு வழிகாட்டுதல்களைப் பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது. அதில், மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவருந்தும் சேவைகள் மற்றும் ஜிம்முகள் மீண்டும் தொடங்குவது குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது.
தற்போது, உணவகங்களில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மேலும் உணவருந்தும் சேவையைத் தொடங்குவதற்கான கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், இந்திய தேசிய உணவகங்கள் சங்கம் உணவகங்களில் உணவருந்த வழிகாட்டு நெறிமுறைகளை மகாராஷ்டிரா அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, உணவருந்தும் சேவைகள் அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், மாநிலத்தில் ஜிம்களை மீண்டும் திறக்க அனுமதி குறித்து மாநில அரசு விவாதிக்கலாம் என்று தெரிவித்தன. அண்மையில், ஜிம் உரிமையாளர்களின் ஒரு குழுவை முதல்வர் உத்தவ் தாக்கரே சந்தித்து, ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, மிஷன் பிகின் அகெய்ன் 5.0 இன் கீழ் சில தளர்வுகள் கூடிய வழிகாட்டு நெறிமுறை நடைமுறைக்கும் வரும் என்று எதிரிபார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…