அனுமன் பாடல் வழக்கில் மகா எம்பி நவ்நீத் ராணா, கணவர் ரவி ராணா ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்தது.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டின் முன் அனுமன் பாடல்களை பாடப்போவதாக அறிவித்ததை அடுத்து, கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி மராட்டிய எம்பியும், நடிகையுமான எம்பி நவ்நீத் ராணா, கணவர் ரவி ராணா ஆகிய இருவரும் 153 ஏ பிரிவின் கீழ் மும்பை காவல்துறை கைது செய்திருந்தது. அனுமன் பாடல்களை பாட போவதாக அறிவித்ததை தொடர்ந்து, எம்பி நவ்நீத் ராணா வீட்டின் முன்பு சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, இருவரையும் மும்பை காவல்துறை கைது செய்திருந்தது. கைது செய்யப்பட்ட இருவரையும் மே 6 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்பின், ஜாமீன் கோரி வழக்கு தொடுத்திருந்த நிலையில், எம்பி நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர் எம்எல்ஏ ரவி ராணா ஆகியோர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்து மேலும் இரண்டு நாட்கள் சிறையில் இருக்க வேண்டும் என மும்பை நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அனுமன் பாடல் வழக்கில் வழக்கில் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிராவின் அமராவதி எம்பி நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர் எம்எல்ஏ ரவி ராணா ஆகியோருக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…