மும்பை-கர்நாடகா பகுதிக்கு ‘கிட்டூர் கர்நாடகா’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உருவாகி 65 ஆண்டுகள் நிறைவுபெறுவதை ஒட்டி கர்நாடகாவில் நேற்று கர்நாடக ராஜ்யோட்சவா எனும் பெயரில் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள், மும்பை கர்நாடக பகுதிக்கு இன்னும் பழைய பெயரையே வைத்து இருப்பதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. மேலும் அப்பகுதியில் எல்லை பிரச்சனையும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
எனவே இந்த பகுதிக்கு கிட்டூர் கர்நாடகா என விரைவில் பெயர் மாற்றம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் பெல்காவி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மராத்தி மொழி பேசக்கூடிய மக்கள் அதிகம் இருப்பதால் அப்பகுதியை மராட்டிய மாநிலத்துடன் இணைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும், ஏற்கனவே ஹைதராபாத் கர்நாடக பகுதிக்கு கல்யாண கர்நாடகா என பெயர் சூட்டி உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…