புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக- அதிமுக -14 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்திருந்த நிலையில், அண்மையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக, பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமையும் என சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதால் ரங்கசாமி அதிருப்தி அடைந்தார்.
இதனால், கூட்டணியில் இருந்து பிரிந்து தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து, என்.ஆர். காங்கிரஸிடம், பாஜக பேச்சுவாா்த்தை நடத்தியது. ஆனால், கூட்டணியில் இழுபறி நீடித்து வந்த நிலையில், பாஜக நடத்திய தொடா் பேச்சுவாா்த்தை காரணமாக என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி நேற்று இரவு உறுதியானது.
பா.ஜ.க. கூட்டணிக்கு என்.ஆர். காங்கிரஸ் பிடி கொடுக்காமல் இருந்து வந்த நிலையில் அமித்ஷா பேசியதையடுத்து கூட்டணி உறுதியானது என கூறப்படுகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் ரங்கசாமி கூட்டணிக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளதால் இதுநாள்வரை நீடித்து வந்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக- அதிமுக கூட்டணியில் வருகின்ற தேர்தலை சந்திக்க உள்ளனர். மேலும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக- அதிமுக -14 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்தார்.
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…