கட்சியின் தலைவர் ராகுலிடம் தவறாக மொழிபெயர்த்து சொன்னவர்தான் நாராயணசாமி – பிரதமர் மோடி பேச்சு

Published by
Venu

காங்கிரஸ் ஆட்சியின் மோசமான நிர்வாகத்தில் இருந்து புதுச்சேரி மக்கள் விடுதலை பெற்றுள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டையில் நடைபெற்ற பாஜக  பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி இயங்கிய புதுவை அரசு அனைத்து நிர்வாகத்தையும் அழித்தது.மோடி புதுச்சேரி காங்கிரஸ் அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை.

புயல் பாதிப்பு குறித்த பெண்ணின் முறையீட்டை, தன் கட்சியின் தலைவரிடம் தவறாக மொழிபெயர்த்து சொன்னவர்தான் நாராயணசாமி. காங்கிரஸ் கட்சியின் இத்தகைய பொய்யர்களை பொதுமக்களால் எப்படி நம்ப முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் பஞ்சாயத்து தேர்தலை நடத்த மறுத்தது காங்கிரஸ் அரசு.ஜனநாயக விரோத காங்கிரஸுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்.201 6ஆம் ஆண்டில் வாக்களித்த புதுச்சேரி மக்களை காங்கிரஸ் அரசு ஏமாற்றிவிட்டது .காங்கிரஸ் ஆட்சியின் மோசமான நிர்வாகத்தில் இருந்து புதுச்சேரி மக்கள் விடுதலை பெற்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது .குஜராத்  மாநகராட்சி தேர்தலில் பிற கட்சிகளை விட 10 மடங்கு வெற்றியை பாஜக பெற்றது.மீன்வளத்துறை அமைச்சகத்துக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என்கிறது காங்கிரஸ். மீன்வளத்துறைக்கு ஏற்கனவே தனி அமைச்சகமே இருக்கிறது என்பதை காங்கிரஸ் கட்சியினர் மறைத்துவிட்டனர்.

புதுச்சேரியில் கல்வி கட்டமைப்பை உருவாக்குவது தேசிய ஜனநாயக கூட்டணியின் குறிக்கோள் ஆகும்.உள்ளூர் மொழியில் மருத்துவ கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .புதுச்சேரியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.கடல் சார்ந்த துறை மற்றும் கூட்டுறவு சார்ந்த துறையை வலுப்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு மீன்வளத்துறைக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பொய் சொல்வதற்கு தங்கம் ,வெள்ளி பதக்கம் பெறக்கூடியவர்கள் காங்கிரஸ் கட்சியினர் தான் என்று பேசியுள்ளார்.

Published by
Venu

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

7 hours ago