Categories: இந்தியா

பரபரப்பாகும் டெல்லி அரசியல் களம்… அடுத்தடுத்த நகர்வுகள்…

Published by
மணிகண்டன்

டெல்லி: மக்களவை தேர்தலுக்கு பின்னர் அதிகளவு பரபரப்பாக இயங்கி வரும் இடமாக டெல்லி தற்போது மாறி வருகிறது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தற்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் (NDA), காங்கிரஸ் உள்ளடக்கிய இந்தியா (I.N.D.I.A) கூட்டணியும் இன்று டெல்லியில் வெவ்வேறு இடங்களில் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

  • ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், சரத் பவார், அபிஷேக் பானர்ஜி ஆகியோர் கார்கே இல்லத்திற்கு வந்துள்ளனர்.
  • I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டம் கார்கே இல்லத்தில் தற்போது தொடங்கியது.
  • நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு கடிதம் கொடுத்துள்ளனர் என தகவல்.
  • NDA கூட்டம் முடிந்து பிரதமர் மோடி இல்லத்தில் இருந்து புறப்பட்டார் சந்திரபாபு நாயுடு.
  • NDA ஆலோசனை முடிந்த உடன் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பாஜக தலைவர்கள் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
  • நிதிஷ் குமாரை I.N.D.I.A கூட்டணிக்கு நாங்கள் அழைக்கவில்லை. வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். – ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் (I.N.D.I.A) கூட்டணி.
  • சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளார்.
  • காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், கார்கே இல்லத்திற்கு வந்துள்ளார்.
  • பீகார் முதல்வரும் JDU தலைவருமான நிதிஷ்குமார் NDA கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு புறப்பட்டார்.
  • தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு NDA கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு புறப்பட்டார்.
  • NDA ஆலோசனை கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெறுகிறது. I.N.D.I.A ஆலோசனை கூட்டம் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற உள்ளது.
Published by
மணிகண்டன்

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

60 minutes ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

2 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

2 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

4 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago