சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் நீட் தேர்வு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு, சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவன உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து இன்று விசாணைக்கு வந்த வழக்கு சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் நீட் தேர்வு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க இயலாது என்றும் மருத்துவ படிப்பு வியாபாரம் ஆக்கப்படுவதை தடுக்க நீட் தேர்வு என்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இது தொடர்பான அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்டது. இதனிடையே 2010-ல் வெளியிடப்பட்ட அந்த அரசாணையை எதிர்த்து வேலூர் சிஎம்சி உள்ளிட்ட சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்தன. இதையடுத்து மத்திய அரசு தரப்பிலும், இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.
பின்னர் இந்த வழக்குகள் அனைத்தையுமே உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் அந்த வழக்குகளை மாற்றி ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. இந்த நிலையில், தற்போது சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் நீட் தேர்வு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…