#BREAKING: NEET PG தேர்வு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு..!

Published by
murugan

நீட் பிஜி தேர்வை மேலும் 4 மாதங்களுக்கு தேர்வுகளை ஒத்திவைக்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

கடந்த மாதம் 18 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நீட் பிஜி தேர்வு அதிகரித்து வரும் கொரோனாவை மனதில் வைத்து, நீட் பிஜி தேர்வை ஒத்திவைப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிவித்திருந்தார். இப்போது மேலும் 4 மாதங்களுக்கு தேர்வுகளை ஒத்திவைக்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்று மற்றும் மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார். இந்நிலையில், நீட் பிஜி தேர்வு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம்  தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு முன்பு தேர்வு நடத்தப்படாது என தெரிவிக்கபப்ட்டுள்ளது. தேர்வு நடத்துவதற்கு ஒரு மதத்திற்கு முன் மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களை பயன்படுத்தும் வகையில் நீட் பிஜி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரனோ சிகிச்சை பணியில் 100 நாள்கள் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். தொலைபேசியில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கவும், லேசான அறிகுறி உள்ள நோயாளிகளை கண்காணிக்கவும் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு மாணவர்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

NEET PG தேர்வு முன்னதாக ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan
Tags: NEET PG

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

6 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

7 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

8 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

8 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

9 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

10 hours ago