இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லிபுலேக் கணவாய், லிம்பியாதுரா, காலாபானி பகுதிகளை உள்ளடக்கி நேபாளம் கடந்த வாரம் புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடாக நேபாளமானது, இந்தியவுடன் 1800 கி.மீ எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. ஏற்கனவே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கணக்குபடி லிபுலேக் கணவாயை தங்களது பகுதி என்று அண்மை காலமாக கருத்து கூறிவருகிறது. மேலும், லிம்பியாதுரா, காலாபானி பகுதிகளையும் தங்களது பகுதி என நேபாளம் உரிமை கோரிவருகிறது.
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லிபுலேக் கணவாய், லிம்பியாதுரா, காலாபானி பகுதிகளை உள்ளடக்கி நேபாளம் கடந்த வாரம் புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டுள்ளது. இதற்கு நேபாள நாட்டு அமைச்சரவையில் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
நேபாளத்தின் இந்த நடவடிக்கை இந்தியாவின் கடும் கண்டனங்களை சம்பாதித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், நேபாளத்தின் புதிய வரைபடத்தினை பற்றி அதிகாரப்பூர்வமாக விரைவில் இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும். நேபாளத்தில் நடவடிக்கை வரலாற்று ரீதியான அடிப்படையில் இல்லை. எல்லை பிரச்சனையை பேசி தீர்ப்பதற்கு நேபாளத்தில் நடவடிக்கை ஊறுவிளைவிக்கும். நேபாளம் வெளியிட்ட இந்த வரைபடம் செயற்கையானது.’ என கூறப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…