மத்திய அரசு வசம் உள்ள உபரி நிலங்களை விற்று வருவாய் ஈட்ட தேசிய அளவில் புதிய அமைப்பை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசு துறைகள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் உபரியாக உள்ள நிலங்கள் மற்றும் கட்டிட சொத்துக்களை பணமாக்க தேசிய நில பணமாக்கல் கழகம் அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் வசம் உள்ள உபரி நிலங்கள், பயனற்ற கட்டங்களை விற்று அரசின் வருவாயை அதிகரிக்க திட்டம் என்றும் பயன்படுத்தப்படாத சொத்துக்கள் மற்றும் நிலங்கள் பணமாக்கப்படுவதன் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குஜராத் மாநிலம் ஜாம் நகரில் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக சுகாதார அமைப்பின் மையம் அமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…