இரவு ஊரடங்கை “கொரோனா ஊரடங்கு” என்று மறுபெயரிடுங்கள்;கொரோனாவுக்கான சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்-மோடி

இந்தியாவில் கொரனோ வைரஸ் இன் இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.மகாராஷ்டிரா, பஞ்சாப்,தமிழகம், மற்றும் கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது.
அவசர ஆலோசனைக் கூட்டம்:
இதனையடுத்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் பரவி வரும் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்த பிரதமர் மோடி தலைமையில் அனைத்து முதல் அமைச்சர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சவாலான நிலைமை:
முதலமைச்சர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, பிரதமர் மோடி,”மீண்டும் ஒரு சவாலான நிலைமை உருவாகி வருகிறது.கோவிட்-19 நிலைமையைச் சமாளிக்க உங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
“நம்மிடம் அதற்கான வழிமுறைகள் உள்ளது , இப்போது அனுபவம் உள்ளது; சோதனை, தடமறிதல், சிகிச்சை, கோவிட்-பொருத்தமான அனுகுமுறை ஆகியவை தொற்றுநோயைக் குறைக்க உதவும்” என்று பிரதமர் மோடி முதலமைச்சர்களிடம் கூறினார்.
இரவு ஊரடங்கு:
நாம் மைக்ரோ-கன்டெய்ன்மென்ட் மண்டலங்களில் கவனம் செலுத்த வேண்டும். இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள இடங்களில், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வைத் தொடர, ‘கொரோனா ஊரடங்கு உத்தரவு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இரவு 9 அல்லது 10 மணி முதல் காலை 5 மணி அல்லது காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு நேரத்தைத் தொடங்குவது நல்லது ”என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் கூறுகையில் , “கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்த்துப் போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் தற்பொழுது உள்ள தொற்று முதல் உச்ச அலைகளைத் தாண்டிவிட்டன. இது ஒரு தீவிரமான கவலை. மக்கள் சாதரணமாக உள்ளனர்.பெரும்பாலான மாநில அரசுகள் கவலையின்றி சாதாரணமாக உள்ளனர் என்றார்.
சோதனைகளை அதிகப்படுத்துங்கள்:
கொரோனாவுக்கான சோதனைகளை அதிகப்படுத்துமாறு உங்கள் அனைவரையும் வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். 70% RT-PCR சோதனைகளைச் செய்ய வேண்டும் என்பதே நம் இலக்கு. நேர்மறையான நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகமாக வரட்டும், ஆனால் அதிகபட்ச சோதனை செய்யுங்கள். சரியான மாதிரி சேகரிப்பு மிக முக்கியமானது, சரியான நிர்வாகத்தின் மூலம் அதை சரிபார்க்க முடியும்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025