இந்த கொடூர குற்றவாளிகள் தனித்தனியாக கருணை மனு, சீராய்வு மனு தாக்கல் செய்து வருவதை தொடர்ந்து, இவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. கடந்த 1-ம் தேதி டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில், குற்றவாளிகளை டில்லி பாட்டியாலா செசன்சு நீதிமன்றம் தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய,மாநில அரசுகள் சார்பிலும் டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி சுரேஷ் கயித், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் நிர்பயாவின் பெற்றோர் டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், ‘குற்றவாளிகளுக்கான துாக்கு தண்டனையை நிறைவேற்ற, செசன்ஸ் நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்’ என, வலியுறுத்தியுள்ளனர்.மத்திய அரசு மனு மீது, டில்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…