கடந்த ஒரு வாரத்தில் 146 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் அவர்கள் கூறியுள்ளார்.
கொரோனா விவகாரம் தொடர்பாக புதுடெல்லியில் மந்திரிகளின் உயர்மட்டக்குழு கூட்டம் காணொளி மூலமாக நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் அவர்கள் தலைமை தாங்கி பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனாவின் வளர்ச்சியை இந்தியா முடக்கி விட்டதாகவும் கடந்த 7 நாட்களில் புதிதாக 146 மாவட்டங்களில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை எனவும், 18 மாவட்டங்களில் 14 நாட்களாகவே புதிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், 6 மாவட்டங்களில் 21 நாட்களாகவும், 21 மாவட்டங்களில் 28 நாட்களாகவும் புதிதாக தொற்று ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இது அனைத்தும் 19 கோடியே 50 லட்சம் கொரோனா பரிசோதனை நடத்தி சிகிச்சை அளித்ததால் ஏற்பட்ட முன்னேற்றம் எனவும், ஒருநாள் பரிசோதனை திறன் 12 லட்சமாக நாட்டில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்திற்கும் குறைவாகவே ஏற்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி மேற்கொண்ட அணுகுமுறையால் கொரோனாவை வெற்றிகரமாக ஒடுக்கிஉள்ள தாகவும் தெரிவித்துள்ள அவர், இங்கிலாந்தில் இருந்து பரவிய உருமாறிய கொரோனாவால் இதுவரை 125 பேர் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், பல்வேறு நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பு ஊசிகளை விநியோகித்து உலக நம்பிக்கையை பெற்றுள்ளது எனவும் பேசியுள்ளார்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…