இனி பார்க்கிங் கட்டணம் செலுத்த “பாஸ்டேக்” முறையை பயன்படுத்தலாம்- NPCI அறிவிப்பு!

Published by
Surya

 சுங்கக்கட்டணத்தை தொடர்ந்து, இனி விமான நிலையங்கள், மால்களில் பார்க்கிங் கட்டணம் செலுத்த பாஸ்டேக் முறையை பயன்படுத்தலாம்.

நாம் பலமுறை சுங்கச்சாவடியை கடந்திருக்கிறோம். அப்பொழுது “பாஸ்டேக்” எனஒரு தனி லைன் இருப்பதை அறிந்திருப்போம். அதன் விழியாக செல்லும் வாகனம், நிற்க்காமல் செல்லும். அவ்வாறு செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் கிடையாது என ஒருபோதும் எண்ணி விடாதீர்கள்.

அவர்கள் “பாஸ்டேக்” என்ற கார்டை பயன்படுத்தி சுங்கக் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். சுங்க சாவடிகளில் கூட்ட நெரிசல் மற்றும் நேரத்தை சேமிக்க நெடுஞ்சாலை துறை இந்த முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக ஒரு அடையாள எண் கொண்ட ஒரு ஸ்டிக்கர் உங்கள் வாகன கண்ணாடியில் ஓட்டப்படும்.

அதன்பின், நமது வாகனம் சுங்க சாவடியை கடந்து செல்லும்போது அந்த ஸ்டிக்கரை அங்குள்ள கருவி ஸ்கேன் செய்து, நமது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்துக்கொள்ளும். இதற்கு நாம் ரீசார்ச் செய்வது அவசியம்.

இந்த பாஸ்டேக் முறை அறிமுகமானதில் இருந்து, தற்பொழுது வரை பலரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் நாம் சுங்கச்சாவடியில் நிற்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாம். இந்நிலையில் விமான நிலையங்கள், மால்களில் பார்க்கிங் கட்டணம் செலுத்த இந்த பாஸ்டேக் முறையை பயன்படுத்தலாம்.

டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய முக்கிய பெருநகரங்களில் உள்ள மால்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற தனியார் வாகன நிறுத்துமிடங்களில் பார்க்கிங் கட்டணத்தை செலுத்த ஃபாஸ்டேக்குகள் பயன்படுத்தக்கூடிய வகையில், இயங்கக்கூடிய முறையை அறிமுகப்படுத்துவதாக தேசிய கட்டணக் கழகம் (NPCI) தெரிவித்தது.

இந்த வசதி, முதலாவதாக ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள முக்கிய மால்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற தனியார் வாகன நிறுத்துமிடங்களில் இந்த சேவைகளுக்கு தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் NPCI COO பிரவீனா ராய் தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

2 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

3 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

5 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

5 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

7 hours ago