டெல்லி திகார் சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் சோதனைக்கு பயந்து, செல்போனை விழுங்கிய கைதி.
டெல்லி திகார் சிறையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள கைதிகள் மொபைல் போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை உபயோகப்படுத்துகின்றார்களா என சோதனை செய்வது வழக்கம்.
அந்த வகையில் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது திகார் சிறையில் எண்.1-ல் இருந்த கைதியிடம் சிறிய ரக செல்போன் ஒன்று இருந்துள்ளது. அதிகாரிகள் சோதனை செய்து விடுவார்கள் என்ற பயத்தில் அந்த கைதி மொபைல்போனை சிறை அதிகாரிகள் மற்றும் பிற கைதிகள் முன்னிலையிலேயே அந்த போனை விழுங்கியுள்ளார்.
அதன் பின்பு அவரது நிலைமை மோசமடைய சிறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின் கூடுதல் சிகிச்சைக்காக தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து மத்திய சிறையின் இயக்குனர் சந்தீப் கோயல் கூறுகையில், செல்போனை விழுங்கிய கைதியின் நிலைமை முன்னேறி உள்ளது. மொபைல் போன் கைதியின் வயிற்றில் தான் உள்ளது. அது தானாகவே வருவதற்கான சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொள்கின்றன. அப்படி வராத பட்சத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…