ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் அமைகிறதா??.!

Published by
kavitha
நாடுமுழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் சீரான கல்வியை வழங்க ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் என்கிற அமைப்பை நிறுவ மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி வழக்கறிஞரும்,பாஜக தலைவருமான அஸ்வினிகுமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில்  பொது நல மனு  ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவின்  விவரம்:
நாடு முழுவதும் 6- 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பொது பாடத்திட்டங்கள் மற்றும் பாடங்கள் கொண்ட சீரான கல்வியை வழங்க வேண்டும். இதற்காக என்று  இந்திய இடைநிலை கல்வி வாரிய சான்றிதழ் மற்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆகியவற்றை இணைத்து ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதற்கு என்று தேசிய அளவில் கல்வி கவுன்சில் என்கின்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.சமூக, பொருளாதார, சமத்துவம் மற்றும் நீதியை அடைவதற்கு தனியார் நிர்வகிக்கும் பள்ளிகள், மத்திய மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் பள்ளிகள் என எதுவாக  இருந்தாலும் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம் உருவாக்க மத்திய அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வினிகுமார் தாக்கல் செய்த இந்த மனு மீதான விசாரணை  சுப்ரீம் கோர்ட்டில் விரைவில்  விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by
kavitha

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

2 minutes ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

18 minutes ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

1 hour ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

2 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

3 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

3 hours ago