ஹைதராபாத் : கோத்தூரில் மூன்று லாரிகள் மோதியதில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம் அடைந்தார். சிசிடிவி காட்சிகள் மூலம் மூன்று லாரிகள் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தெரிய வந்துள்ளது. ஒரு ஸ்கூட்டியில் இரண்டு நபர்கள் அந்த சாலையில் சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது அதற்கு பக்கத்தில் இருந்த ஒரு டிரக் வேறு திசையில் இருந்து சாலையை கடக்க முயன்றது.
அப்போது அந்த திசையில் வந்த மற்றோரு லாரி இரண்டாவது லாரியின் மீது மோதியது. மோதியவுடன் அந்த லாரி நிலை தடுமாறி எதிர்முனையில் சென்று கொண்டு இருந்த மற்றோரு லாரி மீது மோதியது. இதில் 3-வதாக மோதிய அந்த லாரி கீழே விழுந்த நிலையில் அந்த பக்கம் சென்று கொண்டு இருந்த ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்த இரண்டு பேர் மீது கவிழ்ந்தது.
இதில் சம்பவ இடத்தில் ஸ்கூட்டி ஓட்டி சென்ற ஒருவர் உயிரிழந்தது தெரியவந்தது. அதே நேரத்தில் மற்றோருவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் யார் மீது தவறு? எனவும் யார் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்? எனவும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…