Delhi IT Office Fire [File Image]
சென்னை : டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டெல்லியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் சி.ஆர் கட்டிடத்தில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு , சம்பவ இடத்திற்கு சுமார் 21 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதற்கிடையில், அலுவலகத்தின் உள்ளே இருந்த ஊழியர்கள் பெரும்பாலானோர் வெளியேறினார். வெளியேற முடியாமல் தவித்த ஊழியர்களை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக ஜன்னல் வழியாக வெளியேற்றினர். அதனை அடுத்து தீ முழுதும் அணைக்கப்பட்டு குளிர்விக்கும் முயற்சி நடைபெற்றது.
இந்த தீ விபத்தில், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என முதலில் கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளியான தகவலின்படி, ஒரு ஊழியர் உயிரிழந்தார் என PTI செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…