வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திய எதிர்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு செய்யப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடைபெற்ற இரு அவைகளில் மக்களவை மற்றும் மாநிலங்கவையில் தாக்கல் செய்தார். பின்னர் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று 2021-22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்.
இந்நிலையில், இன்று தொடங்கிய மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுத்ததால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.அவை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததால், எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை காலை 11.30 மணி வரை மீண்டும் ஒத்திவைத்து சபாநாயகர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திய எதிர்கட்சிகளின் அமளி காரணமாக அவை மீண்டும் ஒத்திவைப்பு செய்யப்பட்டது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…