பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பா அணையின் நீர்மட்டம் தற்போது 983.05 மீட்டராக உயர்ந்துள்ளதை அடுத்து, அம்மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் பல பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கேரள மாநிலத்தில் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பா அணை கனமழையின் காரணமாக நிரம்பி வழிகிறது.
பம்பா அணையின் நீர்மட்டம் தற்போது 983.05 மீட்டராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையமானது, பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
984.5 மீட்டராக பம்பா அணையின் நீர்மட்டம் உயரும்போது பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கனமழை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக அணையின் நீர்மட்டமானது விரைவில் 984 மீட்டராக உயரும் என கூறப்படுகிறது.
தொடர் மழையின் காரணமாக ஆலுவாவில் உள்ள சிவன் கோவிலின் ஒரு பகுதி மழைநீரால் மூழ்கியுள்ளது. திருசூர் மாவட்டம் மன்னுத்து பைபாஸில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கோழிக்கோடு மாவட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம், தொடர் கனமழை காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் பருவமழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமானது 136 அடியை எட்டும்போது அணையில் இருந்து மதகுகளின் வழியாக வைகை அணைக்கு நீர் வெளியேற்றப்படும் எனவும், இதற்கான கோரிக்கையானது தமிழக அரசிடம் விடுக்கப்பட்டுள்ளது எனவும் கேரள முதல்வர் முன்னரே தெரிவித்திருந்தார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…