கொரோனா வைரஸை குணப்படுத்தும் Coronil மருந்தை வாங்க ‘OrderMe’ பயன்பாடு மிக விரைவில் வர வாய்ப்புள்ளது என்று ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் குணப்படுத்துவதற்கு ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி நேற்று ஹரித்வாரில் உள்ளபதஞ்சலி யோக பீத்தில் நேற்று மதியம் 12 மணிக்கு வெளிட்டார். பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட இந்த ஆயுர்வேத மருந்து கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்திற்கு “Coronil” என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “கொரோனில் மற்றும் ஸ்வாசரி” இந்த மருந்துகள் நாடு முழுவதும் 280 நோயாளிகளுக்கு சோதனை செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன என்று பதஞ்சலியின் நிறுவனர் ராம்தேவ் கூறினார். இந்த மருந்து ரூ.545 விலையில் விற்கப்படுகிறது இது ஒரு வாரத்திற்குள் இந்தியா முழுவதும் விற்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில் “OrderMe” என்ற புதிய பயன்பாட்டை பதஞ்சலி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் வீட்டிலிருந்தே கொரோனிலை ஆர்டர் செய்ய முடியும். மேலும் விரைவில் கொரோனா மருந்து OrderMe பயன்பாட்டில் கிடைக்கும் என்று ராம்தேவ் கூறியுள்ளார்.
இந்நிலையில் பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளின் விவரங்களை வழங்குமாறு மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த விவரங்களை பார்க்கும் வரை விளம்பரம் செய்வதையோ அல்லது விளம்பரப்படுத்துவதையோ நிறுத்துமாறு அந்நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மருந்துகளின் கலவை, அதன் ஆராய்ச்சியின் முடிவுகள், ஆராய்ச்சி நடத்தப்பட்ட மருத்துவமனைகள் நிறுவன விவரங்களை விரைவாக கொடுக்குமாறு மத்திய அரசு கேட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…