மீரட்டில் இருந்து டெல்லிக்கு சென்ற அசாதுதீன் ஒவைசியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் ஹபூரில் அசாதுதீன் ஒவைசியின் கார் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஒவைசி ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
ஒவைசி ட்விட்டரில், “சில நேரத்திற்கு முன்பு டோல்கேட்டில் எனது கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 4 ரவுண்டுகள் சுடப்பட்டன. 3-4 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஓடிப்போய் விட்டனர். என் கார் பஞ்சர் ஆனது, ஆனால் நான் வேறொரு காரில் இறங்கி கிளம்பினேன். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதில், குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…