மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக கடந்த 25 மணி நேரத்தில் மட்டும் 12 நோயாளிகள் உயிரிழந்துள்ளனராம்.
கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதிலும் தனது வீரியத்தை அதிகரித்து வரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திடீரென கொரோனா வைரஸின் வீரியம் மீண்டும் அதிகரித்ததால் பல்வேறு மாநில அரசுகள் தங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு திணறி வருகிறது.
இந்நிலையில் பல்வேறு பணம் படைத்த தொழிலதிபர்கள் இதற்காக உதவி வந்தாலும், பல மாநிலங்களில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் குறைவாகவே உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஷடோல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 25 மணி நேரத்தில் மட்டும் ஆக்சிஜன் சப்ளை பற்றாக்குறை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகத்தான் தங்கள் உறவினர்கள் உயிரிழந்துள்ளதாக கூறினாலும், மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. மேலும் அவர்கள் மிக மோசமான சூழ்நிலையில் இருந்த நோயாளிகள் தான் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…