Categories: இந்தியா

தேர்தல் அறிக்கையை சுற்றித்தான் எங்களது பரப்புரை… பா.சிதம்பரம்

Published by
பாலா கலியமூர்த்தி

Election2024: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும் என்று பா.சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு நேற்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தயார் செய்த 5 தலைப்புகளின் கீழ் 25 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

அதில், சாதிவாரி கணக்கெடுப்பு, நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் கட்டாயம் இல்லை, 1 முதல் 12ம் வகுப்பு வரை இலவச கல்வி, கல்வி கடன் ரத்து,  இட ஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படாது, குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வாக்குறுதிகள் உள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அவர் கூறியதாவது, சமூகநீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவற்றுக்கு தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.  எங்கள் தேர்தல் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும். தேர்தல் அறிக்கையை சுற்றித்தான் எங்கள் பரப்புரை இருக்கும்.

தேர்தல் அறிக்கையில் சொன்ன கருத்துகளுக்கு எதிராக கருத்துகளை வரவேற்கிறோம். எங்கள் கருத்துக்களுக்கு பாஜக உடன்படாது என எனக்கு தெரியும். இந்திய அரசியல் அமைப்பினுடைய சமஸ்டி அரசு அமைப்பு முறைக்கு பாஜக விரோதமானவர்கள் என்று நாங்கள் குற்றசாட்டிக்கிறோம் என்று தெரிவித்தார். எங்கள் கூட்டணியில் எல்லாம் கருத்துக்களுக்கும் உடன்பட்டு தான் இருக்கிறது.

திமுக, காங்கிரஸ் அறிக்கைகள் ஒத்துப்போவது இயற்கையான ஒன்றுதான். முரண்பட்ட கூட்டணியை காங்கிரஸ், திமுக அமைக்கவில்லை. எனவே, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும் என்றும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்தார்.

Recent Posts

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

9 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

10 hours ago

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

11 hours ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

11 hours ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

12 hours ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

12 hours ago