இன்று டெல்லியில் பிதமர் இல்லத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தார் 2017 ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவின் மனுஷி சில்லர்.
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி இந்தியாவில் சிறுகுறு தொழில் முனைவோர் ,வர்த்தகர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளைப் பற்றி இன்று காலை குஜராத்தில் உள்ள அம்ரேலி நகரில் வர்த்தகர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மகாராஷ்டிரா:கடந்த வருடம் பணமதிப்பிளப்பு(demonetised currency notes) நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட சுமார் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த 5 பேர் தானே அருகே கைது செய்யப்பட்டுள்ளனர் என மும்பை வருமான வரித் துறை தெரிவித்தனர்.மேலும் இது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
பெண் தொழில் முனைவோர் மேம்படுத்தும் பற்றி பேச Ivanka ட்ரம்ப் இந்தியா வந்தார். ஹைதராபாதில் பல நூற்றாண்டுகள் பழமையான தெற்கு நகரம் ஒரு தொழில்நுட்ப மையமாக உருவெடுத்தது, அமெரிக்க ஜனாதிபதி குடும்பத்தின் கவர்ச்சியைப் பெறுவதற்கு அவரது பயணம் ஒரு வாய்ப்பாக இருந்தது.
மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமானநிலையத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்துடன் சிஐஎஸ்எஃப் வீரர்கள் ஒரு பயணியைக் கண்டுபிடித்தது. பாங்காக் செல்லும் பயணிகள் அனைவரையும், மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கானது தனி சுங்கத்துறை அலுவலர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது
கேரளாவை சேர்ந்த மத மாற்று திருமணம் செய்த ஹாதியா – ஷபின் ஜகான் திருமணத்தை ரத்து செய்தது கேரள உயர் நீதிமன்றம். ரத்துக்கு ஆதாரமாக உயர்நீதிமன்றம் கூறியதுதான் பெரும் அதிர்ச்சி. அதுதான் லவ் ஜிகாத். கேரளா உயர் நீதிமன்றத்தின் இந்த அநீதி உத்தரவை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஹாதியா தாக்கல் செய்த மனுவின் விசாரணை சற்று ஆறுதல் அளிக்கிறது. “சேலத்திற்கு சென்று தனது ஹோமியோபதி படிப்பை தொடர அனுமதி அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்”. ஒரு இந்திய குடிமகள் என்கிற முறையில் ஹாதியாவுக்கு […]
மத்திய அரசின் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஓர் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அதில் இந்தியாவில் பார்கிங் விதிமீறல்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் கூறினார். இதனால் இனி விதி மீறி வாகனங்களை பார்கிங் செய்பவர்கள் தண்டிக்க படுவார்கள் எனவும் அதனை ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் அவர்கள் செலுத்தும் தொகையிலிருந்து 10% கமிசன் புகார் தெரிவிப்பவர்களுக்கு சன்மானமாக கொடுக்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கத்காரி அறிவித்துள்ளார். நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அலுவலகத்திலேயே […]
உத்தர பிரதேச மாநிலத்தில் குதிரைக்கும், கழுதைக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதன் விவரம் பின்வருமாறு அந்த மாநிலத்தில் உள்ள உரய் மாவட்டத்தின் ஜாலோன் நகரில் இருக்கும் மாவட்டச் சிறை வளாகத்தை அழகு படுத்தும் நோக்கில் அங்கு பல வகையான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. இதனை 3 நாள்களுக்கு முன், 2 குதிரைகளும், 2 கழுதைகளும் வளாகத்தில் நுழைந்து இங்குள்ள மரக் கன்றுகளைக் கடித்து தின்றுவிட்டன. அதனால் கோபமடைந்த அந்த சிறை நிர்வாகிகள் 4 விலங்குகளையும் சுற்றி வளைத்துப் […]
இந்திய வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகள் இவங்கா ட்ரம்ப் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறும் மகளீர் தொழில் முனைவோர் மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.அவர் வருகையையொட்டி ஹைதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்படுதப்பட்டிருந்தது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஓவியத்தை குஜராத்தை சேர்ந்த ஓவியர் மனோஜ் அவர்கள் வரைந்துள்ளார். இந்த ஓவியத்தை வரைய அவர் எடுத்துக்கொண்ட காலம் 5 மாதம் ஆகும். இந்த ஓவியத்தின் அளவு 80 சதுரஅடி. இந்த ஓவியமானது உலகத்திலேயே மிகப்பெரிய கையில் வரையபெற்ற ஓவியமாகும். இந்த ஓவியம் குஜராதில் உள்ள பூஜ்-இல் உள்ளது.
இந்திய முஸ்லீம்கள் ராமனின் வழி வந்தவர்கள் எனவே அவர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உதவி செய்யவேண்டும்” – பீஹார் மாநில பா.ஜ.க. தலைவர் கிரிராஜ் சிங் வேண்டுகோள் . இதுவரை கேள்விப்படாத திடுக்கிடும் உண்மையா இருக்கே. அது சரி, அவர்கள் ராமனின் வழித் தோன்றல்கள் என்றால் உங்களது கட்சியின் தலைவர்கள் ஏன்அவ்வப்போது அவர்களை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லி விரட்டிக் கொண்டே இருக்கிறார்கள்..?
டெல்லியில் தேசிய சட்ட நாளை சட்ட ஆணையமும், நிதி ஆயோக் அமைப்பும் இணைந்து கொண்டாடியது. விழாவில் நேற்று பிரதமர் நரேந்திரமோடி நிறைவுரையாற்றினார். அதில் கூறியதாவது, கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நாட்டுக்கு ஏற்பட்ட செலவு ரூ.1,100 கோடி. ஆனால் 2014-ஆம் ஆண்டு தேர்தலில் செலவிடப்பட்டதோ ரூ.4 ஆயிரம் கோடி. ஆரம்பகாலத்தில் பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்ததால் நாடு பலனடைந்ததை நாம் பார்த்துள்ளோம். ஆனால் நமது சொந்த பலவீனம் காரணமாகவே இந்த நடைமுறை தவறாக […]
உத்தரபிரதேச மாநிலத்தில் 2-வது கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. 2ஆம் கட்ட தேர்தல் 25 மாவட்டங்களில் நடைபெற்றது. இதில் மொத்தம் ஒரு கோடியே 29 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். இந்த உள்ளாட்சி தேர்தலில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தனது குடும்பத்துடன் லக்னோவில் ஓட்டுபோட்டார். நடந்துமுடிந்த 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 52 சதவீத ஓட்டுப்பதிவானது. லக்னோ மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்துக்கட்சிகளும் மேயர் பதவிக்கு பெண் […]
12 வயதிற்குள் இருக்கும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் “மரண தண்டனை” என்ற புதிய சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தது- மத்திய பிரதேச அமைச்சரவை.
குஜராத் மாநிலம் வாரணாசியில் உள்ள குஜராத் மத்திய பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சியின் மாணவர் சங்கமான ABVP பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கனவே அதன் வசமிருந்த அனைத்து பொறுப்புகளையும் இழந்துவிட்டது. குஜராத் சட்டமன்ற தேர்தல்கள் நெருங்கிவரும் வேளையில் இந்த தோல்விகள் பா.ஜ.க. தலைமைக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. குஜராத் மாநில இளைஞர்கள் பா.ஜ.க.வின் மீது கொண்டுள்ள வெறுப்பின் அடையாளமாக இதனை அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
“இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பயன்படுகின்றன, அவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்தவேண்டும் ” -இன்றைய தினம் பிரதமர் மந்திரி நரேந்திர மோதியின் “mankibath” அதாவது “மனதின் குரல்” நிகழ்ச்சி மூலம் வானொலி, தொலைக்காட்சியில் பேசியது. . “இணைய தளத்திலும் சமூக வலை தளங்களிலும் .. ஏன் வானொலி தொலைக் காட்சிகளில் கூட பலர் தவறான பிரச்சாரங்களை செய்கின்றனர். அவற்றை மக்கள் நம்பக கூடாது” – ஒரு வாரத்துக்கு முன்னர் பா.ஜ.க. தலைவர் அமித் […]
கர்நாடக மாநிலம், தேவரகுட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் திருமணமான பெண் நாகவேணி கொடேரா.கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அந்த கிராமத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு குழந்தையைப் பெற்றெடுத்த அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு, ரத்த அழுத்தம் குறைந்து இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நாகவேணியின் உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைப்பெற்று கொண்டிருந்தது. அப்போது இறந்தாக கூறப்பட்ட அப்பெண் திறந்து பார்த்ததோடு கை, கால்களையும் அசைத்துள்ளார்.இதனைக் கண்ட உறவினர்கள், உடனடியாக அவரை […]
கேரள இடது முன்னணி அரசாங்கத்தின் ஹைடெக் பள்ளி திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 20,000 அரசு நிதியில் செயல்படக்கூடிய அரசுப் பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்துவரும் இடது முன்னணியின் ஆட்சி, சமூக நீதியை நிலைநாட்டுவதில் முன்னோடியாக விளங்கி வருகிறது. தற்போது கல்வித் துறையிலும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளிகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தில் அது இறங்கியுள்ளது.கேரள கட்டமைப்பு மற்றும் தொழில் கல்வி என்ற […]
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கடற்படை கமாண்டோ மகள் சுபாங்கி சொரூப் இந்திய கடற்படையின் முதல் பெண் விமான பைலட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கேரளாவில் உள்ள கண்ணூரில் “எழிமலா நேவல் அகாடமி” பயிற்சி மையத்தில் கடற்படை பயிற்சியை பெற்றார். அதேபோல் இதே பயிற்சி மையத்தில் படித்த மூன்று பெண்கள் கடற்படையின் ஒரு பிரிவான போர்தளவாடங்கள் ஆய்வாளரகத்துக்கு (என்.ஏ.ஐ.) முதல் பெண் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லியை சேர்ந்த அஸ்தா செகல், புதுச்சேரியை சேர்ந்த ஏ.ரூபா, கேரளாவை சேர்ந்த எஸ்.சக்தி மாயா ஆகியோர் ஆவர். […]