திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை பிரிவினரை அனுப்பினர். முதலமைச்சர் அலுவலகம் மற்றும் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்ததால், மோப்ப நாய்கள் மற்றும் சிறப்புக் குழுக்கள் மூலம் முழுமையான ஆய்வு நடந்து வருகிறது. இருப்பினும், இதுவரை இரு இடங்களிலும் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நேற்றைய தினம், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு […]
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசா காலக்கெடு குறித்து முக்கிய உத்தரவு வெளியானது. SAARC விசா உள்ளவர்கள் நேற்று முன் தினம் […]
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. விசா நிறுத்தம், தூதரக உறவு, வர்த்தக உறவு துண்டிப்பு, சிந்து நதிநீர் பகிர்வு நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல பாகிஸ்தான் அரசும், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு […]
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா வருவது வாடிக்கையாகி வருகிறது. அதனை தடுக்க அரசும் உரிய முயற்சி எடுத்துவந்தாலும் அந்த போலி செய்திகள் பரவல் குறைந்தபாடில்லை. அப்படியான ஒரு செய்தி தான், பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய ராணுவத்திற்கு நிதி கேட்டு ஒரு போலி செய்தி வாட்ஸ்அப்பில் பரவியுள்ளது. இந்திய ராணுவத்திற்கான ஆயுதங்களை நவீனபடுத்தவும், இந்திய ராணுவத்தை மேம்படுதவும் நன்கொடை அளிக்கும் திட்டத்தை […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு ஆதரவை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஆபரேஷன் பிரம்மா பற்றியும் பேசினார். அங்கு ஒரு கள மருத்துவமனை அமைத்தல், முக்கியமான கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுதல் மற்றும் போர்வைகள், கூடாரங்கள், தூக்கப் பைகள், மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் பலவற்றை வழங்குதல் போன்ற இந்தியக் குழுவின் முயற்சிகளைப் […]
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு எதிராக பல்வேறு தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டையே துயரத்தில் ஆழ்த்திய இந்தத் தாக்குதல் குறித்து ஆழ்ந்த வேதனை […]
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது இந்தியா தனது அடக்குமுறையைத் தீவிரப்படுத்திய நிலையில், பந்திபோரா, புல்வாமா மற்றும் ஷோபியன் மாவட்டங்களில் மூன்று தீவிர பயங்கரவாதிகளின் வீடுகளை அதிகாரிகள் இடித்துள்ளதாக அதிகாரிகள் இன்றைய தினம் தெரிவித்தனர். நேற்றைய தினம் பயங்கரவாதிகள் 4 பேரின் வீடுகளை […]
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு எதிராக பல்வேறு தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான சூழலில் நேற்று நள்ளிரவு திடீரென பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் பகுதியில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை மீறி இந்திய எல்லைக்குள் 2வது நாளாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனை அடுத்து இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவம் மீது பதில் தாக்குதல் […]
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச் சேர்ந்த ஆரத்தி மேனன், ”காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” என்று உருக்கமாக பேசியுள்ளார். பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 பேரில், பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளில் அவரது தந்தை 65 வயதான என். ராமச்சந்திரனும் ஒருவர். கொச்சியின் எடப்பள்ளியைச் சேர்ந்த ராமச்சந்திரனின் உடல் நேற்று முன் தினம் இரவு 8 மணியளவில் […]
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து பந்திப்போராவில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. அப்பொழுது, பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை அடைந்ததும், துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) உயர்மட்ட தளபதி அல்தாஃப் லல்லி கொல்லப்பட்டார் என்று தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி […]
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நேற்று உதம்பூரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார், இருவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள […]
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் பிடியில் சிக்கி இருப்பது கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூர் (Ferozpur) இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படை (Border Security Force) வீரராக பணியாற்றி வரும் பி.கே.சிங் எனும் ராணுவ வீரர், இந்திய எல்லை கடந்து பாகிஸ்தான் எல்லை பகுதிக்கு […]
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம் நடவுபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான விசாக்களையும் மத்திய அரசு உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது. இதன்படி, இனி எந்த பாகிஸ்தானிய குடிமகனும் இந்தியாவுக்குள் நுழைய முடியாது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கான விசா வரும் 27ம் தேதி முதல் செல்லாது. மேலும், மருத்துவ காரணங்களுக்காக பெறப்பட்ட விசா […]
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என அடுத்தடுத்து இந்தியா பதிலடி கொடுத்தது. இதன் கீழ், இன்று கடற்படை ஐஎன்எஸ் சூரத்திலிருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அழிவு ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது. இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை இந்தியா மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கராச்சி கடற்பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை […]
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பல்வேறு தடை விதிப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலை நடத்தியது TRF எனும் உள்ளூர் பயங்கரவாத அமைப்பு என்றாலும், அந்த அமைப்பு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற அமைப்பு என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என லஷ்கர் இ தொய்பா […]
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலரும் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் குஜராத் மாநிலம் சூரத் நகரின் வராச்சா பகுதியை சேர்ந்த ஷைலேஷ் கல்தியா என்பவரும் ஒருவர். அவரும் தனது குடும்பத்தோடு பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள்ளார். தனது தந்தை ஷைலேஷ் கல்தியா பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததைஅவரது மகன் நக்ஷ் கல்தியா சம்பவ […]
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி ஒரு வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் 22ம் தேதி அன்று, மதியம் 02:30 மணியளவில் 4-6 பயங்கரவாதிகள் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை […]
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர் கேக்கை எடுத்துச் சென்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது, பத்திரிக்கையாளர்கள் அவரிடம், கேக் எதற்கு, யாருக்கு? கொண்டாட்டமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் எதற்காக கேக்கை உள்ளே எடுத்துச் சென்றார் என்பது குறித்து எதுவும் கூறவில்லை. முன்னதாக, தூதரகத்திற்கு கொடுக்கப்பட்டு இருந்த பாதுகாப்பை இந்திய அரசு வாபஸ் பெற்றது. இதனிடையே, இன்று […]
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து, மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), ஜம்மு – காஷ்மீர் காவல்துறை, மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) இணைந்து பைசரன் பகுதியைச் சுற்றி தேடுதல் […]
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ரேகுட்டா வனப்பகுதியில், தெலுங்கானா எல்லைக்கு அருகே பாதுகாப்புப் படையினருடன் நடந்த ஒரு பெரிய மோதலில் மூன்று நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் .கடந்த மூன்று நாட்களில் இந்தப் பகுதியில் தொடங்கப்பட்ட மிகப்பெரிய […]