இந்தியா

கேரள மாநில படகு விபத்து.! பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு.!

கேரள மாநிலம் மலப்புரம் பகுதி படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி பகுதி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கப்பலில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று, இந்நிலையில், இதுவரை 21 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 8 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் […]

2 Min Read
malappuram boat accident

மஞ்சள் விவகாரம் : காங்கிரஸ் என்னை அவமதிக்கவில்லை.! பிரதமர் மோடி பேச்சு.!

மஞ்சள் விவகாரத்தில் காங்கிரஸ் என்னை அவமதிக்கவில்லை. மஞ்சள் விவசாயிகளை அவமதித்தனர் என பிரதமர் மோடி பேசியுள்ளார். கர்நாடகாவில் இன்று தேர்தல் பிரச்சாரம் இறுதி நாள் என்பதால், இறுதிக்கட்ட பிரச்சத்தில் பிரதான கட்சி தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி நேற்று மைசூரு மாவட்டம் நஞ்சன்குட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு மஞ்சள் விவசாயிகள் முன்பு பேசிய பிரதமர், கொரோனா தொற்று காலத்தில் மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என கூறினேன். ஆனால் […]

2 Min Read

BigBreaking:கேரளா படகு விபத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு;பிரதமர் மோடி இரங்கல்

கேரளா மலப்புரத்தில் தனூரில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மாலை 6.30 மணிக்குப் பிறகு ஒட்டும்புரத்தின் தோவல் தீராமில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.படகில் குறைந்தது 30-40 பேர் இருந்ததாக மனோரமா நியூஸிடம் ஒரு இளைஞர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது. படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார், மேலும் அவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (பிஎம்என்ஆர்எஃப்) இருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். […]

3 Min Read
kerala boat accident

அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே குண்டுவெடிப்பு… சிறுமிகள் காயம்.!

பஞ்சாப், அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். பஞ்சாபின் கோல்டன் டெம்பிள் என அழைக்கப்படும் அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. குண்டுவெடிப்பு, சரகர்ஹி சாராய் என்ற குடியிருப்பு பகுதிக்கு முன்னால் உள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது. Several injured in blast near #Amritsar‘s #GoldenTemple Devotees and locals were gripped with fear presuming a terrorist attack. Police maintained that […]

4 Min Read
Amritsar blast

மணிப்பூரில் பயங்கர கலவரம்….அமைதி திரும்பவேண்டும்… ஏ.ஆர்.ரஹ்மான் பிரார்த்தனை.!

மணிப்பூரில் கலவரம் நடைபெற்று வந்த நிலையில் அமைதி திரும்ப வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார். மணிப்பூரில் கடந்த சில நாட்களாக குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறி கலவரம் ஏற்பட்டதைத்தொடர்ந்து கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன, மேலும் அங்கு இன்னும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் மணிப்பூரில் நிலவிவரும் பதற்றம் குறைந்து அமைதி திரும்பவேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். […]

2 Min Read
ARRahman manipur

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு நிறைவு…!!

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவடைந்தது. தேசிய தேர்வு முகமையானது (NTA), மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 499 நகரங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வானது மாலை 5.20 மணிக்கு முடிவடைந்தது. மிகுந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடந்த இந்த தேர்வில் மாணவ,மாணவியர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள […]

3 Min Read
neet2023

வீட்டிலிருந்தே இணையத்தில் 13,000 அரசு சேவைகளைப் பெறுங்கள்… வெளியான முக்கிய அறிவிப்பு.!

வீட்டில் இருந்தபடியே அரசு வழங்கும் 13,000 சேவைகளை பெறும் தேசிய அரசாங்க சேவைகள் போர்டல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில, மாவட்டம் மற்றும் உள்ளூர் வட்டங்களில் உள்ள அரசு நிறுவனங்களால் வெவ்வேறு இணையதளங்கள் மூலம் குடிமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் இப்போது ஒரே தளத்தின் கீழ் வரும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பல்வேறு சேவைகளை நன்கு வகைப்படுத்தப்பட்ட மற்றும் எளிதாக பட்டியலிட்டு தேடும் வகையில் புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய இணையதளமான  https://services.india.gov.in […]

4 Min Read
PMIndia

குஜராத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணவில்லை…வெளிவந்த அதிர்ச்சி தகவல்.,!

குஜராத்தில் ஐந்தாண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்று புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கி 2020 வரையிலான காலகட்டத்தில் 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, 2016-ல் 7,105 பெண்களும், 2017-ல் 7,712 பெண்களும், 2018-ல் 9,246 பெண்களும், 2019-ல் 9,268 பெண்களும் காணாமல் போயுள்ளனர். மேலும் […]

4 Min Read
WomenMissing

கட்டுக்கட்டாக கிடந்த ரூ.2,000 நோட்டுகள்…கழிவுநீரில் குதித்து அள்ளிய பொதுமக்கள்…வைரலாகும் வீடியோ.!!

பீகார் மாநிலதில் பணத்தை எடுப்பதற்காக மக்கள் கழிவுநீரில் கூட்டமாக குதித்துள்ளனர்.  பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் கிடைந்ததால் கிராம மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு கழிவுநீரில் குதித்த பொதுமக்கள் ஏராளமானோர் ரூ.2,000, ரூ.500, ரூ.100, ரூ.10 உள்ளிட்ட பல்வேறு மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றார்கள். காலையிலேயே வாய்க்காலில் ரூபாய் ந ட்டுகள் அடங்கிய பைகள் காணப்பட்டன. உடனடியாக இந்த […]

3 Min Read
Patna

வன்முறை எதிரொலி…! மணிப்பூரில் இன்று நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைப்பு…

பதற்றமான சூழ்நிலை காரணமாக மணிப்பூர் மாநிலத்தில் இன்று நடைபெறவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது. இந்த கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன. மணிப்பூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இணைய சேவை முடக்கப்பட்டு, கலவரக்காரர்களை சுட மணிப்பூர் ஆளுநர் அனுமதி வழங்கியிருந்தார். கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை, இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வு ஒத்திவைப்பு: […]

4 Min Read
Neet Exam IN Manipur

இன்று நடைபெறுகிறது இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு.!

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தேசிய தேர்வு முகமையானது(NTA), மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட்(NEET) நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 499 நகரங்களில் நடக்கவிருக்கும் இத்தேர்வு, இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவடையும். இதில், நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு தமிழ், ஆங்கிலம் […]

3 Min Read
NEET Exam

காயத்திற்கு மருந்துக்கு பதில் பசையை ஒட்டி அனுப்பிய மருத்துவர்கள்.! பெற்றோர்கள் அதிர்ச்சி.!

தெலுங்கானாவில் ஒரு சிறுவனுக்கு தனியார் மருத்துவர் ஒருவர் தையல் போடுவதற்கு பதில் பெவிக் விக் ஒட்டியுள்ளார்.   தெலுங்கானாவில் ஆயிஜாவில் வம்சிகிருஷ்ணா – சுனிதா தம்பதியினரின் மகன் பிரவீன் எனும் சிறுவனுக்கு இடது கண்ணின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர்கள் அழைத்து சென்றனர்.  அப்போது அங்கிருந்த மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார். அதாவது, நெற்றியில் தையல் போட வேண்டிய நிலைமை இருந்துள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனை மருத்துவர் அந்த இடத்தில் […]

2 Min Read
Doctor

மணிப்பூர் விவகாரம்! வதந்திகளை நம்ப வேண்டாம் – மத்திய அமைச்சர்

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தல். மணிப்பூர் வன்முறை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.  மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள், பிற மாநில மாணவர்கள் உள்ளிட்டோரை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் கூறியுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக […]

4 Min Read
Rajkumar Ranjan Singh

ஆதார் எண்களை கையாள 22 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி.!

ஆதார் எண்ணை கையாள 22 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதார் எண் விவரங்களளை தனியார் நிறுவனங்கள், அரசின் குறிப்பிட்ட சலுகைகளுக்கு  சரிபார்க்கும்படியான வாய்ப்பை கையாள மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையிலும் அரசு நடவடிக்கை தொடர்ந்தது. தற்போது முதற்கட்டமாக, 22 நிறுவனங்களுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, 22 நிதி நிறுவனங்கள் ஆதார் எண்ணை சரிபார்ப்பு பணிகளுக்கு மேற்கொள்ள நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது .இதன்படி, இந்த உத்தரவின்படி கீழ்கண்ட நிறுவனங்கள் […]

2 Min Read
Aadhar

மணிப்பூர் வன்முறை! 54 பேர் உயிரிழப்பு..13,000 பேர் மீட்பு!

மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட நடந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54-ஆக உயர்வு. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது. இந்த கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன. மணிப்பூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இணைய சேவை முடக்கப்பட்டு, கலவரக்காரர்களை சுட மணிப்பூர் ஆளுநர் அனுமதி வழங்கியிருந்தார். கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை, இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், மணிப்பூரில் […]

4 Min Read
Manipur violence

தவறு செய்தால் இனி வீடியோ ஆதாரம் இருக்கு.! மும்பை ரயில்வே துறையின் சூப்பர் ஐடியா.!

மும்பை ரயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாடி கேமிரா மற்றும் QR கோடு பணபரிமாற்ற வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரயிலில் சில சமயம் நடக்கும் வன்முறை சம்பவங்களை தடுக்கவும், டிக்கெட் எடுக்காதவர்கள், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும், மத்திய ரயில்வேயின் மும்பை கோட்டம் புதிய நடவடிக்கை மேற்கொண்டது. அதில், மும்பை கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாடி கேமராக்கள் மற்றும் அபராதம் வசூலிக்க QR கோடு ஆகியவை அளிக்கப்பட உள்ளன. இதற்காக, மத்திய ரயில்வே, ஒரு கேமிரா 9000 ரூபாய் […]

3 Min Read
Mumbai Railway Station

கர்நாடக சட்டசபை தேர்தல்: பெங்களூருவில் இரண்டு நாள் பிரதமர் மோடி மெகா சாலைப்பேரணி.!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தின் மெகா சாலைப் பேரணியை பிரதமர் மோடி இன்று பெங்களுருவில் நடத்துகிறார். கர்நாடக சட்டப்பேரவைதேர்தல் நெருங்கிவரும் வேளையில் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் பாஜகவும், இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என காங்கிரசும் பலத்த போட்டியில் ஈடுபட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். மே 10-ம் தேதி நடைபெறும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 13இல் நடைபெறும் என […]

4 Min Read
PM ModiRoadshow

மல்லிகார்ஜுன கார்கேவை கொலை செய்ய சதி – காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

மல்லிகார்ஜுன கார்கேவைக் கொல்ல பாஜக செய்ய சதி செய்ததாக காங்கிரஸ் பரப்பரப்பு குற்றச்சாட்டு. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பாஜக தலைவர்கள் சதித்திட்டம் தீட்டுவதாக காங்கிரஸ் எம்பி ரன்தீப் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியுள்ளார். சித்தாபூர் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட் மற்றும் உள்ளூர் பாஜக தலைவர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடலின் ஆடியோ கிளிப்பை ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்டார். அதில், கர்நாடகாவின் சித்தப்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட், “கார்கேவின் […]

4 Min Read
Mallikarjun Kharge

அயோத்தி கோயில்.! ராமர் பக்தர்கள் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றினார்.! கர்நாடகாவில் அமித்ஷா பேச்சு.!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதன் மூலம் ராமர் பக்தர்களின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றினார் என கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு.  கர்நாடகாவில்  சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் (மே 10) வரவுள்ள நிலையில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கர்நாடக தேர்தல் களம் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் இதற்கு முன்னர் செய்த பணிகள், செய்ய போகும் வாக்குறுதிகள், […]

3 Min Read
Amit Shah

காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாமதம்…வங்கக்கடலில் உருவாகிறது புயல்…வானிலை மையம் எச்சரிக்கை.!!

வங்கக் கடலில் வரும் 7-ஆம் தேதி (இன்று) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும், இது வரும் 8-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, பின் புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் முன்னதாக தகவல் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது நாளை உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் உருவாகும் எனவும், 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் பின்னர் […]

3 Min Read
storm is