டெல்லி : இன்று இந்தியா முழுக்க விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை தங்கள் பகுதிகளில் நிறுவி வழிபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்தை பதிவிட்டுள்ளார். அதில், நாட்டில் உள்ள அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின விழா வாழ்த்துக்கள் என பதிவிட்டு […]
டெல்லி : ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பாக இன்னும் ஹரியானா மாநில தேர்தலில் யார் போட்டியிட உள்ளனர் என்ற இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாமல் இருக்கிறது. இப்படியான சூழலில் தான், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை அண்மையில் சந்தித்தனர். இதனால், ஹரியானா […]
சென்னை : உண்மை கதையை அடிப்படையாய் கொண்டு உருவாகி இருந்த தொடர் தான் ‘IC-814 தி கந்தஹார் ஹைஜாக்’. இந்த தொடர் மத ரீதியான சர்ச்சையில் சிக்கி இருந்தது. இது குறித்து முதலில் அந்த வெப் சீரியஸின் இயக்குந ர் பதிலளிக்கவில்லை என்றாலும் தற்போது மௌனம் கலைத்துள்ளார். கடந்த, 1999-ல் இந்தியன் ஏர்லைன்ஸ் IC 814- என்ற விமானத்தை சில தீவிரவாதிகள் கடத்தினார்கள். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்த தொடர் முழுவதும் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த […]
டெல்லி : கடந்த ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் இறுதி போட்டி வரை சென்று 100 கிராம் எடை கூடியதால் பதக்கத்தை இழந்தார் வினேஷ் போகத். பதக்கத்தை இழந்தாலும், இந்திய மக்கள் மத்தியில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கான வரவேற்ப்பை அவர் பெற்றார். பதக்கத்தை இழந்த வினேஷ் போகத், தன்னால் இதற்கு மேல் போராட வலிமையில்லை எனக் கூறி மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு, வினேஷ் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் […]
மகாராஷ்டிரா : மும்பையின் புகழ்பெற்ற கமலா மில் வளாகத்தில் அமைந்துள்ள ‘டைம்ஸ் டவர்’ கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. லோயர் பரேல் பகுதியில் உள்ள இந்த வணிக கட்டிடம் ஏழு மாடிகளைக் கொண்டது. இன்று காலை 6.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் அக்கம் பக்கத்தினர் பதறி அடித்து ஓடினர். உடனே, தீயணைப்பு வீரர்களுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், 9 […]
கொல்கத்தா : பணியிலிருந்த பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட துயரச் சம்பவம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், காவல்துறையினர் தங்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாகப் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை சஞ்சய் ராய் எனும் ஒருவர் மட்டுமே கைதாகி உள்ளார். […]
ஆந்திரப் பிரதேசம் : ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் சத்யவேடு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் கோனேட்டி ஆதிமூலம் (Koneti Adimulam). இவர் மீது ஒரு பெண் பாலியல் புகாரை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அது தொடர்பாக எனக்கூறி, இணையத்தில் ஒரு சர்ச்சை வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்திகளை பிக் டிவி எனும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த செய்தி நிறுவனம் தங்கள் எக்ஸ் வளைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் […]
கொல்கத்தா : கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஆர்.ஜி கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் மேற்கொண்ட விசாரணையில் சஞ்சய் ராய் எனும் தன்னார்வலர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். அவரையும் குற்றவாளியாக சிபிஐ உறுதி செய்யவில்லை. அடுத்ததாக இந்த வழக்கில் ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் […]
டெல்லி : ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு கடந்த 2014 மற்றும் 2019 என கடந்த 2 தேர்தல்களிலும் வெற்றிபெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த முறை கூட்டணி பலத்துடன் ஆட்சியை பிடித்த பாஜகவும், வெற்றிக்கு அருகாமை வரை வந்து ஆட்சியை கைப்பற்ற தவறிய காங்கிரசும் இந்த முறை பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் […]
விஜயவாடா : அந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கள் உடமைகளையும் இழந்து தவித்து வரும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், மக்களை பாதுகாக்கும் பணியில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான மாநில அரசு பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டும் இன்றி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரவு பகல் பாராமல் களத்திற்கே நேரடியாக சென்று நிவாரண பணிகளை ஆய்வு செய்வது, […]
உ.பி : இந்தியாவில் பலரும் பல விஷயங்களுக்காக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் நாடு முழுவதும் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது நீட் தேர்வு தான். ஆனால், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயில்வதற்கு முக்கியமாக அமைவது இந்த நீட் தேர்வு தான். இப்படி தேர்வு முறை சரியில்லை, கேள்விகள் கடிமானது என பல எதிர்ப்புகள் ஒரு பக்கம் வந்தாலும், மறுபக்கம் இந்த தேர்வு எழுதும் மாணவர்களில் ஒரு சிலர் குறிப்பாக ஏழை எளிய மாணவர்கள் நன்றாக […]
சென்னை : சமீபத்தில், புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்-ஸில் வெளியாகி இருந்த ‘ஐசி-814 தி கந்தஹார் ஹைஜாக்’ எனும் வெப்சீரிஸ் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த தொடர், கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவமான ஐசி-814 விமான கடத்தலை மையமாக கொண்டு உருவாகி இருந்தது. அந்த தொடரில், ஹைஜாக் செய்யும் குற்றவாளிகளின் உண்மை பெயர்களை மறைத்து அதற்கு புனைவு பெயராக ஹிந்து மத பெயர்களை பயன்படுத்தி இருந்தனர். இது சமூகத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பாகிஸ்தான் […]
விஜயவாடா : கடந்த சில நாட்களாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தை அடுத்து, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளார். நன்கொடை அளித்த 1 கோடி […]
கொல்கத்தா : கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆர்.ஜி கர் மருத்துவமனை வளாகத்தில் 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரணை குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையின் ஆரம்பகட்டத்தில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சஞ்சய் ராய் எனும் தன்னார்வலர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, ஆர்.ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் […]
புதுடெல்லி : பிரதமர் மோடி புரூனே நாட்டுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். இந்தியா மற்றும் புருனே இடையே நட்புறவு ஏற்பட்டு 40 ஆண்டை ஒட்டி, அந்நாட்டு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே செல்கிறார். இதன்மூலம் புரூனே செல்லும் முதல் இந்தியத் தலைவர் எனும் பெருமையை மோடி பெறுகிறார். புருனே பயணத்தின் போது, வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (கிழக்கு) ஜெய்தீப் மசூம்தார், புருனேயுடனான உறவுகள் குறித்து பிரதமர் […]
விஜயவாடா : ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்த தொடர் கனமழையால் பல நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. குறிப்பாக, ஆந்திராவின் விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. ஆந்திராவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டித் தீர்த்த கனமழை, வெள்ளப்பெருக்கால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த விஜயவாடாவில் விடிய விடிய முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு ஆய்வு மேற்கொண்டார். ஆந்திரா, […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய துறைகளின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதில், விவசாயத்திற்கு மட்டுமே சுமார் ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவுபெற்ற பிறகு, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார். விவசாயம் சார்ந்த பல்வேறு […]
கொல்கத்தா : கடந்த மாதம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வளைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி வரும் நிலையில், மருத்துவர்களும் மாணவர்களும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் (ஏஐடிசி) தனது […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயனாக வரும் செப்டம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் சிங்கப்பூர் செல்கிறார். பிரதமரின் இந்த பயணம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் ஜெய்தீப் மசூம்தார் பல்வேறு முக்கிய தகவல்களை செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார். 6 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார் என குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், “செப்டம்பர் 4ஆம் தேதி பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு செல்கிறர். அங்கு இந்தியாவுக்கான […]
ஆந்திரப் பிரதேசம் : ஆந்திராவில் கொட்டித் தீர்த்த கனமழையால் விஜயவாடா உள்பட பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. வயநாடு நிலச்சரிவு துயரம் மறைவதற்குள், ஆந்திரா தொடர்பான வீடியோக்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. மேலும், கடந்த 2 நாள்களாக பெய்து வரும் கனமழையால் தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் 110 கிராமங்கள் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, ஹைதராபாத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா வெள்ளத்தில் இருந்து 17,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், […]