ஆந்திரப் பிரதேசம் : ஆந்திராவில் கொட்டித் தீர்த்த கனமழையால் விஜயவாடா உள்பட பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. வயநாடு நிலச்சரிவு துயரம் மறைவதற்குள், ஆந்திரா தொடர்பான வீடியோக்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. மேலும், கடந்த 2 நாள்களாக பெய்து வரும் கனமழையால் தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் 110 கிராமங்கள் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, ஹைதராபாத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா வெள்ளத்தில் இருந்து 17,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், […]
டெல்லி : பெண்களின் பாதுகாப்பிற்கு நாட்டில் கடுமையான சட்டங்கள் உள்ளன. அதனை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து, டெல்லியில் நீதித்துறையின் தேசிய மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும், இந்திய […]
கொல்கத்தா : கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை தற்போதைய சூழலில் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்க வேண்டும் என நாடெங்கிலும் குரல்கள் வலுத்து வருகின்றன. மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி மத்திய அரசுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். அதில், பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க […]
திருவனந்தபுரம் : ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவத்தையும் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது. மலையாள திரையுலகில், பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. தற்பொழுது இந்த ஹேமா கமிட்டி அறிக்கையின் முழுமையான வடிவத்தை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்குமாறு கேரள தலைமைச் செயலாளர் (சிஎஸ்) சாரதா முரளீதரனுக்கு தேசிய மகளிர் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. கேரள […]
மகாராஷ்டிரா : பால்கரில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி, சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது குறித்து தான் மன்னிப்பு கேட்டுகொள்கொள்வதாக குறிப்பிட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி தேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த சிலையானது, கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி […]
ஆந்திர பிரதேசம் : கிருஷ்ணா மாவட்டத்தில் ஓர் தனியார் கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமிரா வைத்து வீடியோக்கள் எடுக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் ஓர் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்குள்ள மாணவிகள் விடுதியில் உள்ள குளியறையில் ரகசிய கேமிரா வைக்கப்பட்டு அதன் மூலம் மாணவிகளின் வீடியோ பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மாலையில் சில மாணவிகள், விடுதி குளியலறையில் […]
கொல்கத்தா : பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் நிகழ்ந்தது குறித்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு 3 அழைப்புகள் வந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி, கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆர்.ஜி கர் மருத்துவமனை வளாகத்தில் ஓர் கருத்தரங்கு ஒன்றில் நடைபெற்ற இந்த கொடூர நிகழ்வில் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படாமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்த […]
டெல்லி : தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை சமயத்தில் மேற்கொண்ட தற்காப்புக் கலை பயிற்சி வீடியோவை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவான் மறைந்த மேஜர் தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 (இன்று) தேசிய விளையாட்டு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய விளையாட்டு தினமான இன்று காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் (டிவிட்டர்) சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளது. அதில், காங்கிரஸ் இளம் […]
குஜராத் : கனமழை வெள்ள பாதிப்பால் இதுவரை மாநிலத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17,800 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாநிலத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்த வெள்ள பாதிப்பால் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநில அரசின் தரவுகளின்படி , குஜராத்தில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக பெய்யும் மழையளவில், 105 […]
கொல்கத்தா : பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் மருத்துவர்களை நான் மிரட்டியதாக கூறுவது உண்மையல்ல என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி விளக்கமளித்துள்ளார். கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படாததால், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக கொல்கத்தாவில் ஜூனியர் மருத்துவர்கள் 20 நாட்களை கடந்தும் இன்னும் பணிக்கு திரும்பாமல் போராடி வருகின்றனர். மருத்துவர்கள் போராட்டம் […]
திருச்சூர் : தனது வழியை மறித்ததாகச் செய்தியாளர்கள் மீது அமைச்சர் சுரேஷ் கோபி திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மலையாள சினிமாவில், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி தைரியமாகப் புகார் அளித்து வருகிறார்கள். நடிகைகளில் அளிக்கும் புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம்சாட்டப் பட்டவர்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் குறிப்பாக, நடிகர் முகேஷ் மீது […]
டெல்லி : இன்று முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரையில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் அரசு சேவை இணையதளம் பராமரிப்பு காரணங்களால் மூடப்படுகிறது. இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் முக்கிய அடையாள அட்டையாக பாஸ்போர்ட் எனும் கடவு சீட்டு உள்ளது. இந்த பாஸ்போர்ட் பெற ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன் மூலம் அப்பாய்ண்ட்மென்ட் (முன்குறிப்பிட்ட தேதி) பதிவு செய்து அந்த தேதியில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆவணங்களை பதிவு செய்ய […]
கொல்கத்தா : பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்தில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனை கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை இந்திய மருத்துவர்கள் சங்கம் சஸ்பெண்ட் செய்துள்ளது. கொல்கத்தாவில் 31 வயதான பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயே நடந்த இந்த சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படாமல் இருப்பதால் […]
குஜராத் : 4 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக பேய் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களைத் தொடர்ந்து மீட்பு பணியினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு […]
உத்திரப் பிரதேசம் : மாநில அரசு திட்டங்களை மக்களிடம் இணைய வாயிலாக பிரபலப்படுத்தினால் அதற்கு அரசு ஊதியம் வழங்கும் மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய மாநில அரசுகள் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்தி வருகிறது. அந்த அனைத்து திட்டங்களும் மக்கள் மத்தியில் தெரிந்து இருக்குமா என்றால், அது சந்தேகமே. ஒவ்வொரு திட்டமும் தகுதி வாய்ந்த நபர்கள் அனைவரிடத்திலும் சரியாக சென்றடைவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. சில பிரதான திட்டங்களுக்கு மட்டுமே அரசு […]
கொல்கத்தா : பாலியல் குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம் மேற்கு வங்கத்தில் கொண்டுவரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார். நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை சம்பவத்திற்கு தற்போது வரையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கொல்கத்தாவில் நேற்று மாணவர்கள் பேரணி, இன்று கடையடைப்பு, 20 நாட்களாக தொடரும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் என நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் […]
டெல்லி : காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒரு குழப்பம். இன்னும் அவர் தனது பாதையை தேர்ந்தெடுக்காமல் இருக்கிறார் என பாஜக எம்பி கங்கனா ரனாவத் கூறியுள்ளார். நடிகையும், பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் அவ்வபோது தனது சர்ச்சை கருத்துக்களால் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறிவிடுகிறார். சில சமயம் சொந்த கட்சியினரே அதிருப்தி தெரிவிக்கும் நிலையில் இவரது கருத்துக்கள் அமைந்து விடுகிறது. அண்மையில் கூட விவசாயிகள் போராட்டத்தை வங்கதேச கலவரத்துடன் ஒப்பிட்டு பேசி சொந்த கட்சி தலைமையே […]
கொல்கத்தா : வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் பாஜக பிரமுகர் பிரியாங்கு பாண்டே சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு, தற்போது வரையில் கொல்கத்தாவில் பல்வேறு வழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று மாணவர் அமைப்பினர் கொல்கத்தாவில் உள்ள தலைமை செயலகம் நோக்கி பேரணியில் ஈடுபட்டு […]
கொல்கத்தா : இன்று திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பு தினத்தை கொண்டாடவில்லை என்று மம்தா பேனர்ஜி தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் ஆளும் அரசாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது இன்றைய தினத்தை (ஆகஸ்ட் 28) ஆண்டுதோறும், சத்ர பரிஷத் ( கட்சியின் மாணவர் அமைப்பு) தினமாக கொண்டாடி வருகிறது. ஆனால், இந்த ஆண்டு சத்ர பரிஷத் தினத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொண்டாடவில்லை. அதற்கான காரணத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், […]
திருச்சூர் : மலையாள திரையுலகில் அதிகரித்து வரும் ‘மீடூ’ குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சுரேஷ் கோபி தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக ஹேமா குழு அளித்த அறிக்கையை அடுத்து, மலையாள திரைப்பட நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு இன்று ராஜினாமா செய்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டி முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள […]