கொல்கத்தா : வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் பாஜக பிரமுகர் பிரியாங்கு பாண்டே சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு, தற்போது வரையில் கொல்கத்தாவில் பல்வேறு வழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று மாணவர் அமைப்பினர் கொல்கத்தாவில் உள்ள தலைமை செயலகம் நோக்கி பேரணியில் ஈடுபட்டு […]
கொல்கத்தா : இன்று திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பு தினத்தை கொண்டாடவில்லை என்று மம்தா பேனர்ஜி தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் ஆளும் அரசாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது இன்றைய தினத்தை (ஆகஸ்ட் 28) ஆண்டுதோறும், சத்ர பரிஷத் ( கட்சியின் மாணவர் அமைப்பு) தினமாக கொண்டாடி வருகிறது. ஆனால், இந்த ஆண்டு சத்ர பரிஷத் தினத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொண்டாடவில்லை. அதற்கான காரணத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், […]
திருச்சூர் : மலையாள திரையுலகில் அதிகரித்து வரும் ‘மீடூ’ குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சுரேஷ் கோபி தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக ஹேமா குழு அளித்த அறிக்கையை அடுத்து, மலையாள திரைப்பட நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு இன்று ராஜினாமா செய்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டி முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள […]
கொல்கத்தா : மம்தா பேனர்ஜி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அங்கீகரிக்கப்படாத மாணவர் அமைப்பைச் சேர்ந்தோர் பேரணி நடத்தியுள்ளனர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விட மம்தா பதவி விலக வேண்டும் என்ற குரல்தான் வலுப்பெற்று வருகிறது. கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூர கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்குப் பின்னால் இருக்கும் உண்மையான குற்றவாளிகள் யார்? அவர்களுக்குப் பின்னால் இருந்த நோக்கம் என்ன? என்பது […]
டெல்லி : குரங்கு அம்மையை எதிர்த்துப் போராடுவதற்கும், விரைவாக நோயைக் கண்டறிவதற்கும் இந்தியா தற்போது RT-PCR சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளது. தற்போது, ஆப்பிரிக்கா நாடுகளில் தீவிரம் அடைந்து வரும் குரங்கு அம்மை தோற்று நோயை உலக சுகாதார நிறுவனம் (WHO) தனது 2-வது பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவித்திருந்தது. இந்த வைரஸ் பரவக்கூடிய ஒன்றாகவும் குறிப்பாக அதிக இறப்பு விகிதங்களையும் கொண்டுள்ளது. இதனால், உலகநாடுகள் இதற்கு முன்னேற்பாடாகப் பல தீவிரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதிலும், […]
கொல்கத்தா : பெண் பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு பொறுப்பேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பதவி விலக வேண்டுமென மாணவர் அமைப்பினர் இன்று தலைமை செயலகம் நோக்கிப் பேரணி நடத்த உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடெங்கிலும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கேட்டும் மருத்துவர்கள் பொதுமக்கள் என பலரும் போராடி வருகின்றனர். […]
டெல்லி : லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதன்படி, ஜான்ஸ்கார் (Zanskar), ட்ராஸ் (Drass) , ஷாம் (Sham), நுப்ரா (Nubra), சாங்தாங் (Changthang) ஆகிய ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று […]
டெல்லி : ஜம்மு காஷ்மீர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் என ஒரு லிஸ்டை இன்று காலை வெளியிட்ட பாஜக, அதனை சில நிமிடங்களில் திரும்ப பெற்றது. அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்து. அதன்படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் […]
கர்நாடகா : சிறையிலிருந்து வீடியோ காலில் பேசிய விவகாரத்தில், கன்னட நடிகர் தர்ஷன் வேறு சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன், ரேணுகாசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷன், தூகுதீபா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரேணுகாசாமி கொலை வழக்கில் தற்போது தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கவுடா உட்பட மொத்தம் 17 பேர் […]
பீகார் : கேம் விளையாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட இளைஞர் ஒருவர், சாவி, கத்தி, நக வெட்டிகளை விழுங்கியதால் பரபரப்பை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த இளைஞன், (பிஜிஎம்ஐ) என்ற ஆன்லைன் மொபைல் கேமை இடைவிடாமல் விளையாடி வந்துள்ளார். வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் அந்த கேமை விளையாட இடைவிடாமல் விளையாடி வந்ததால், அவரது குடும்பத்தினர் மொபைல் போனை புடுங்கி வைத்து கேம் விளையாட அனுமதி மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சாவிக் கொத்து, 2 நக […]
டெல்லி : பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்கமுடியாது, அத்தகைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி கொல்கத்தா மருத்துவமனை கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து மகாராஷ்டிராவில் எல்.கே.ஜி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை என ஆரம்பித்து தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் பள்ளி […]
சென்னை : நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், கிருஷ்ணர் பக்தர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர். இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமி எனப்படும் இந்த பண்டிகை, திருஷ்டி பூஜையில் பகவான் கிருஷ்ணரின் பிறப்பை கொண்டாடும் பண்டிகையாகும். இந்நன்னாளில் பிரதமர் மோடி முதல் தமிழக அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர். பிரதமர் மோடி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள […]
மகாராஷ்டிரா : மும்பையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், ஆற்றுப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர். மும்பையில் இருந்து ஐதராபாத் சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமானது. இதில், பலி எதுவும் ஏற்படவில்லை. படுகாயத்துடன் மீட்கப்பட்ட 4 பேர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருவரின் நிலை […]
டெல்லி : ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் லக்பதி திதி சம்மேளனம் (மகளிர் சுயஉதவிக் குழு) திட்டத்தை நாளை மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி, போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுடனான தனது 3 நாள் அரசுப் பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்ப உள்ளார். நாளை ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலத்தில் நடைபெறும் நலத்திட்ட நிகழ்வுகளில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார். இதில், மகாராஷ்டிரா நிகழ்வு பற்றி பிரதமர் மோடி தனது […]
டெல்லி : கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் எல்.கே.ஜி குழந்தை முதல், 17 வயது சிறுமி வரை பெண் பிள்ளைகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொல்கத்தா பாலியல் வழக்கு : கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனைக் கல்லூரி வளாகத்தினுள்ளேயே பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் […]
கொல்கத்தா : என் மகன் மட்டுமே இந்தக் குற்றத்திற்கு காரணமானவன் அல்ல. இதற்கு பின்னால் ஆட்கள் இருக்கிறார்கள் என கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் கைதாகி இருந்த சஞ்சய் ராயின் தாயார் கூறியுள்ளார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள, பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் இதுவரை சஞ்சய் ராய் எனும் தன்னார்வலர் மட்டுமே கைதாகி உள்ளார். குற்றம் நிகழ்ந்தகாக கூறப்படும் நேரத்தில் கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் சஞ்சய் ராய் […]
சென்னை : இந்தியா தனது முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட், RHUMI 1 ஐ விண்ணில் ஏவப்பட்டது. நாட்டின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான RHUMI-1ஐ விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள்கள் பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி தகவல்களை சேகரிக்கும்.இந்த ராக்கெட் 50 PICO செயற்கைக்கோள்களையும் மூன்று கியூப் செயற்கைக்கோள்களையும் சுமந்து சென்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து உருவாக்கிய, இந்த ராக்கெட் சென்னை திருவிடந்தையிலிருந்து […]
உக்ரைன் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து இந்தியா சார்பாக மருத்துவ உதவிகளை வழங்கினார் பிரதமர் மோடி. போலாந்தில் இருந்து ரயில் மூலம் உக்ரைனுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்துள்ளனர். இதன் மூலம் 45 ஆண்டுகளுக்குப் பிறகு, உக்ரைன் சென்றுள்ள இந்திய பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் மோடி. அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ள நிலையில், கீவ் நகரம் மீது ரஷ்யா இதுவரை எந்த தாக்குதலும் […]
கொல்கத்தா : பயிற்சிப் பெண் மருத்துவர் படுகொலை வழக்கு மற்றும் ஆர்.ஜி கர் கல்லூரி முன்னாள் முதல்வர் தொடர்பான வழக்கு ஆகியவற்றை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனை வளாகத்திற்குள் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை முதலில் கொல்கத்தா காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணை தேவை என கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொதுநல […]
உத்தரப் பிரதேசம் : பாராபங்கி மாவட்டத்தில்பள்ளியின் முதல் தளம் இடிந்து விழுந்ததில் 40 மாணவர்கள் காயமடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோவை ஒட்டியுள்ள பாரபங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளி கட்டிடத்தின் முதல் தளத்தின் வராண்டாவின் தளம் சரிந்து விழுந்ததில் எட்டு முதல் 15 வயதுக்குட்பட்ட 40 குழந்தைகள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தை தொடர்ந்து பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் போலிஸுக்கு தகவல் தெரிவிக்க, உடனே விரைந்த காவலர்கள் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். […]