உத்தரப் பிரதேசம் : பாராபங்கி மாவட்டத்தில்பள்ளியின் முதல் தளம் இடிந்து விழுந்ததில் 40 மாணவர்கள் காயமடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோவை ஒட்டியுள்ள பாரபங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளி கட்டிடத்தின் முதல் தளத்தின் வராண்டாவின் தளம் சரிந்து விழுந்ததில் எட்டு முதல் 15 வயதுக்குட்பட்ட 40 குழந்தைகள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தை தொடர்ந்து பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் போலிஸுக்கு தகவல் தெரிவிக்க, உடனே விரைந்த காவலர்கள் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். […]
கொல்கத்தா : பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு விசாரணையில் இன்று கல்லூரி முதல்வரிடம் 7வது நாளாக சிபிஐ விசாரணை மேற்கொள்கிறது. நீதிமன்ற கோரிக்கையை அடுத்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது. கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமமனையில் உள்ள ஓர் அறையில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். முதலில் மேற்கு வங்க போலீசார் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிய நிலையில் கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை […]
நேபாளம்: நேபாளத்தில் இந்தியர்கள் 40 பேருடன் இந்திய பயணிகள் பேருந்து ஒன்று தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. போகராவில் இருந்து காத்மாண்டுவுக்கு சென்று கொண்டிருந்த, இந்த பேருந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. தற்பொழுது, இந்த விபத்து நடந்த இடத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது, விபத்து காட்சியில் வாகனம் முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளது. தனாஹுனில் உள்ள மாவட்ட போலீஸ் அலுவலகத்தைச் சேர்ந்த டிஎஸ்பி, இந்த விபத்தை உறுதி செய்து, பேருந்து ஆற்றங்கரையில் கிடப்பதாகத் […]
பெங்களூர் :தன்னுடைய ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர் 30 ரூபாய் விட்டு சென்ற நிலையில் அதை வீடு தேடி சென்று ஆட்டோக்காரர் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியாயம், நேர்மை, அறம் எல்லாம் இன்று செய்திகளில் எழுதித்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அளவுக்கு அரிதான விஷயமாக மாறிவிட்டது. அந்த வகையில் ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர், தனக்கு நடந்த அனுபவத்தைப் பகிர்ந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஆட்டோக்காரன்.. ஆட்டோக்காரன்.. நியாயமுள்ள ரேட்டுக்காரன் என்ற பாடலின் வரி ஆட்டோக்காரர்களுக்குப் பொருந்தும் […]
டெல்லி : சந்திரியான்-3 வெற்றியைக் கொண்டாடும் வகையில் இன்று தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுகிறது. அதனால், பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இதே நாள் இந்திய விண்வெளி துறை மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. அதாவது, அமெரிக்க ரசியா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலாவில் தரையிறங்கிய 4-வது நாடாக இந்தியா இருந்து வருகிறது. இதில் பெருமைப்படும் விஷயம் என்னவென்றால் நிலவில் இதுவரை எந்த நாடும் நெருங்காத தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடக இந்தியா உள்ளது. இதன் […]
டெல்லி : நாளை (ஆகஸ்ட் 23) முதல் தேசிய விண்வெளி தினத்தை இந்தியா கொண்டாட இருக்கிறது என இஸ்ரோ தலைவரான டாக்டர் எஸ்.சோம்நாத் பேட்டியில் கூறியிருக்கிறார். தேசிய விண்வெளி தினம் : எப்போது ? ஏன் ? கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி மையம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்திற்கு அருகே வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனால், உலக நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு […]
டெல்லி : கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவத்திற்கு எதிராக நீதி கேட்டு போராடி வரும் மருத்துவர்கள், விரைவில் தங்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் கோரிக்கை வைத்துள்ளது. கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் […]
டெல்லி : உலகத் தலைவர்கள் பயன்படுத்தும் சொகுசு ரயில் சேவையான உக்ரைனின் ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன்னில் மோடி பயணம் மேகொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று போலந்து நாட்டிற்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போலந்து நாட்டு பயணத்தை முடித்துகொன்டு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைனுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ரஷ்யா – உக்ரைன் […]
டெல்லி : பிரதமர் மோடி இன்றும் நாளையும் போலந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு, அடுத்து வெள்ளியன்று உக்ரைன் நாட்டிற்கு செல்ல உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று போலந்து நாட்டிற்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போலந்து நாட்டு பயணத்தை முடித்துகொன்டு அடுத்து வரும் வெள்ளியன்று உக்ரைன் நாட்டிற்க்கு செல்ல உள்ளார். முன்னதாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி தற்போது உக்ரைன் பயணம் மேற்கொண்டு இருப்பது உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் பற்றி […]
மகாராஷ்டிரா : பத்லாபூரில் எல்.கே.ஜி சிறுமிகள் மற்றும் அகோலா மாவட்டத்தில் 6 பள்ளி மாணவிகள் என அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் பத்லாபூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 4 வயது எல்கேஜி சிறுமிக்கு கடந்த வாரம் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. சிறுமியை பெற்றோர்கள் சோதித்து பார்த்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. இதேபோல இன்னொரு சிறுமி “தான் பள்ளிக்கு செல்லவில்லை” என கூறியுள்ளார். அந்த சிறுமியிடமும் அவர்களது […]
டெல்லி: விமானத்தில் தனியாக பயணிக்கும் பெனுக்கு மற்றொரு பெண் பயணிக்கு அடுத்த இருக்கையை தேர்வு செயயும் அம்சத்தை இண்டிகோ ஏர்லைன்ஸ் கொண்டுவந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ, ஆண்களுக்கு அருகில் அமர்வதை தவிர்க்கும் வகையில், பெண் பயணிகளுக்கு மற்ற பெண்களுக்கு அடுத்த இருக்கைகளை தேர்வு செய்யும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெண் பயணிகள் இணைய செக்-இன் போது, மற்ற பெண் பயணிகள் முன் பதிவு செய்த இருக்கைகளைப் பார்க்க அனுமதிக்கிறது. கடந்த 2023 […]
டெல்லி : மத்திய அரசு பணிகளில் நேரடி நியமன முறைகளுக்கான விளம்பரங்களை ரத்து செய்ய வேண்டும் என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் யுபிஎஸ்சிக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசுத்துறை உயர் பொறுப்புகளில் பெரும்பாலும் பணி அனுபவம் சார்ந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்து ஏற்கனவே அரசு பொறுப்புகளில் இருப்பவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவது வழக்கம். இதனை மாற்றி மத்திய அரசு “லேட்டரல் என்ட்ரி” மூலம் தனியார் நிறுவனங்களில் உயர் பொறுப்பில் இருக்கும் நிபுணர்களை நேரடியாக ஒப்பந்த அடிப்படியில் இணை […]
தெலங்கானா : அண்ணனுக்கு ராக்கி கட்ட செல்லும் வழியில், கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், நடத்துனர் மற்றும் பேருந்தில் பயணித்த செவிலியர் இணைந்து பிரசவம் பார்த்தனர். தெலங்கானா மாநிலம் கட்வால் – வனபர்த்தி வழித்தடத்தில் அரசுப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகளில் நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென வலி ஏற்பட்டது. இதையறிந்த பாரதி என்ற கண்டக்டர், கர்ப்பிணிப் பயணியின் நிலை குறித்து டிரைவர் மற்றும் பயணிகளிடம் எச்சரித்து உடனடியாக உதவி கேட்டார். அருகில் மருத்துவமனை ஏதும் இல்லாத […]
டெல்லி : கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை வரும் வியாழன் அன்று தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை படுகொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இவ்வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இன்று காலை தொடங்கிய வழக்கு விசாரணையில் தலைமை […]
டெல்லி : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ் காந்தியின் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர். மறைந்த முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாள் இன்று (ஆகஸ்ட் 20) கொண்டாடப்படுகிறது. இந்திராகாந்தி மறைவுக்குப் பின்னர், 40 வயதில் இந்தியப் பிரதமராகவும் , காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார் ராஜீவ் காந்தி. இவரது ஆட்சியில் தான் வாக்களிக்கும் வயது 18ஆக குறைக்கப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் திட்டம் ஆகிய முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ராகுல் காந்தி மரியாதை : ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், ராஜீவ் […]
ஆப்பிரிக்கா : பரவி வரும் குரங்கம்மை தொற்றுக்கு முன்னெச்சரிக்கையாக இந்தியாவில் தடுப்பு நடிவடிக்கைள், கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்பிரிக்கா நாட்டில் தற்போது பரவி வரும் குரங்கம்மை எனும் MPox தொற்று உலக சுகாதார அமைப்பிற்கு அடுத்த கட்ட தலைவலியாக இருந்து வருகிறது. கடந்த 2020,2021 என இரண்டு வருடங்கள் உலகம் முழுவதும் பரவி ஒரு பேரிடராக இருந்து வந்தது. அதன்பின் அதற்கான தடுப்பு ஊசிகள் கண்டறிந்து அவற்றின் பாதிப்பை படிப்படியாகக் குறைத்தார். இருந்தாலும் அதன் பாதிப்பு தற்போது வரையில் ஆங்காங்கே நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்த MPox-ஆல் […]
டெல்லி : கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணை நடைபெற உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி கர் மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் உள்ள ஓர் கருத்தரங்கில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. முதலில், கொல்கத்தா காவல்துறையினர், ஒருவரை […]
டெல்லி : ரஷ்யாவுடனான போருக்குப் பின்னர், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக உக்ரைன் செல்கிறார். ரஷியா – உக்ரைன் போர் தொடங்கியதற்குப் பின்னர், முதல் முறையாக அரசு முறை பயணமாக பிரதமர் மோடி உக்ரைன் நாட்டிற்கு செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனிடையே, 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்ற […]
டெல்லி : ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, ராகுல் காந்த மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளனர். ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது குறிப்பாக, வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான பண்டிகை. ரக்ஷா பந்தன் (Raksha Bandhan) என்பது சகோதரர் மற்றும் சகோதரி இடையே உள்ள அன்பையும், பாதுகாப்பையும் வெளிப்படுத்துகிறது. இந்த பண்டிகையின் போது, சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ‘ராகி’ என்று அழைக்கப்படும் ஒரு கயிற்றை கட்டி, அன்பை […]
டெல்லி : இன்று உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி உலக சமஸ்கிருத தினம் கொண்டாடப்படுகிறது. பண்டைய கால நூல்கள் பற்றிய ஆராய்ச்சிகள், இந்து மத வழிபாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கொண்டு சமஸ்கிருத மொழி போற்றி பாதுகாக்கப்படுகிறது. இன்று உலக சமஸ்கிருத தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து செய்தியைப் பதிவிட்டுள்ளார். அதில், “உலக சமஸ்கிருத […]