டெல்லி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று காரணமாக, கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். அவருக்கு வயது (72). இரங்கல் இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து […]
டெல்லி : கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து அவருடைய உடல் நிலை பற்றி மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ” இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சுவாசக் குழாய் தொற்றுக்காக […]
டெல்லி : சர்வதேச ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் குறிப்பிட்ட பிரிவின் கீழ் எடை கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். உடன் மலியுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹரியானவை சேர்ந்த வினேஷ் போகத், ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஜூலானா (Julana) தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக களமிறங்குகிறார். இவர் நேற்று தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் […]
டெல்லி : இந்திய குடிமகனின் தனிப்பட்ட அடையாளச் சான்றுகளில் மிக முக்கிய ஒன்றாக ஆதார் அட்டை உள்ளது. அரசு திட்டங்கள், தனிப்பட்ட அடையாளம், முகவரி சான்று என பல்வேறு வகைகளில் ஆதார் இந்திய மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது. இந்த ஆதாரில் புகைப்படம், கைவிரல் ரேகைகள், கருவிழி விவரங்கள், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் பதிவாகி இருக்கும். இதனைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்திய குடிமக்கள், ஆதார் விவரங்களை புதுப்பிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த […]
டெல்லி : நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில், அவர்களின் மருத்துவ செலவீனங்களை போக்கும் நோக்கில் மத்திய அமைச்சரவை இன்று புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு காப்பீடு அளிக்கும் நோக்கில் இந்த திட்டம் அமைந்துள்ளது […]
டெல்லி : கடந்த ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் இறுதி போட்டி வரை சென்று 100 கிராம் எடை கூடியதால் பதக்கத்தை இழந்தார் வினேஷ் போகத். பதக்கத்தை இழந்தாலும், இந்திய மக்கள் மத்தியில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கான வரவேற்ப்பை அவர் பெற்றார். பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், எடைக் குறைப்புக்காகக் கடுமையாகப் பயிற்சி செய்த வினேஷ் போகத், நீர்சத்து குறைபாடு காரணமாக நீர்சத்து குறைபாடு காரணமாக , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் [IOA) […]
அமெரிக்கா : காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தற்போது அமெரிக்க பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இவர் வாஷிங்டன்னில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று (செவ்வாய்) பேட்டியளித்து இருந்தார். அப்போது இந்திய அரசியல் விவகாரங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினார். இந்தியா – சீனா விவகாரம் : அப்போது இந்தியா – சீனா எல்லை பிரச்சனை குறித்து பேசிய ராகுல் காந்தி , இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக்கில் […]
ஆந்திரா : கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் புதன்கிழமை மினி லாரி கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தேவரப்பள்ளியில் சின்னைகுடம் சிலகா பகால பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முந்திரி கடலை ஏற்றிச் சென்ற மினி லாரி டி நரசாபுரம் மண்டலம் பொர்ரம்பாளையம் பகுதியில் இருந்து சென்றுகொண்டபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்காமல் இருக்க மினி லாரியை திருப்பியபோது எதிர்பாராத விதமாக கால்வாயில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் […]
கொல்கத்தா : ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் 31 வயதான பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சஞ்சய் ராய் எனும் தன்னார்வலர் மட்டுமே கைது செய்யப்பட்டுளளார். மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் இந்த வழக்கின் விசாரணை வளையத்தில் உள்ளார். இவ்வழக்கில் இன்னும் குற்றவாளிகள் உறுதிசெய்யப்படவில்லை. பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியும் நாடு […]
கொல்கத்தா : கடந்த மாத தொடக்கத்தில் ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 31 வயதான பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த குற்ற சம்பவத்தை சிபிஐ விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சிபிஐ விசாரணை வளையத்தில் இருக்கிறார். பயிற்சி மருத்துவர்கள் கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் உறுதி செய்யப்படாத காரணத்தால் […]
டெல்லி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில், அவருடைய ஏற்பட்டுள்ள பிரச்சனை பற்றி மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது. இதனையடுத்து, அவருக்கு சுவாச கருவி பொறுத்தப்பட்டுள்ளதாகவும், அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
அமெரிக்கா : காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தற்போது அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர், வாஷிங்டன் டிசியில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த நேர்காணலில் பங்கேற்ற ராகுல் காந்தி, இந்திய அரசியல் பற்றி பல்வேறு கருத்துக்களை கூறினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி பற்றி கூறுகையில் , “பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை. ஆனால் அவர் கொண்டுள்ள கருத்தியலை நான் […]
டெல்லி : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54வது ஜி.எஸ்.டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தி 2000 ரூபாய்க்கு குறைவாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு நுழைவுக் கட்டணமாக (Gateway Fee) 18 சதவீதத்தை விதிக்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்த முக்கிய முடிவுகள், பரிந்துரைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல, ஆயுள் மற்றும் உடல்நலம் குறித்த காப்பீடுகளுக்கு […]
கொல்கத்தா : கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துக்கல்லூரி, மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின்போது , இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிஐ தங்கள் விசாரணை அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளனர். தற்போது வரையில் […]
இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு தொடங்கிய குக்கி, மெய்தேய் இனத்தினரிடையே ஏற்பட்ட கலவரமானது கடந்த சில மாதங்களில் சற்று அமைதியாக இருந்த நிலையில் , தற்போது கடந்த ஒரு வாரமாக மீண்டும் தாக்குதல்கள் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான சூழலில், மணிப்பூர் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்றும் மாணவர் அமைப்பினர் தலைநகர் இம்பால் சாலையில் நீண்ட பேரணி ஒன்றை நடத்தினர். விமான நிலைய சாலை அருகே நடந்த […]
பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் கடந்த ஆகஸ்ட் 29 ம் தேதி கோலாகலமாக தொடங்கியது பாராலிம்பிக் தொடர். மாற்றுத்திறனாளிகளுக்காகவே நடத்தப்பட்ட இந்த தொடர் 17-வது பாரா ஒலிம்பிக் தொடராகும். இதில் பல உலக நாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி அவர்களது திறமையை வெளிக்காட்டி வந்தனர். கடந்த 11 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அனைத்து போட்டிகளும் நேற்று நிறைவடைந்து. இந்த நிலையில், நேற்று இரவு நிறைவு விழா கோலாகலமாக வாணவேடிக்கைகளுடன் நடைபெற்றது. இந்த […]
டெல்லி : காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பாஜக, பிரதமர் மோடி , ஆர்எஸ்எஸ் பற்றி தனது விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், “இந்தியா என்பது ஒற்றை கருத்த்தை கொண்டு செயல்படுகிறது என ஆர்.எஸ்.எஸ் நம்புகிறது. இந்தியா பல்வேறு கருத்துக்களை கொண்டு செயல்படுகிறது நாங்கள் நம்புகிறோம். ஜாதி, மொழி, மதம், இனம் என வேறுபாடின்றி […]
டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வேட்பாளராக களமிறங்க உள்ளார் என நேற்று அறிவிக்கப்பட்டது. வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் தங்கள் விளையாட்டில் இருந்து விலகி முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ளனர். வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் நேற்று காங்கிரஸில் இணைந்தது குறித்தும், ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத் களமிறங்கியது […]
மணிப்பூர்: பிஷ்ணுபூர், மொய்ராங்கில் குகி தீவிரவாதிகள் வீசிய ராக்கெட்டில் முன்னாள் முதல்வர் மைரெம்பம் கொய்ரெங்கின் வீட்டில் மதச் சடங்குகளைச் செய்து கொண்டிருந்த 78 வயது முதியவர் கொல்லப்பட்டார் இந்த கலவரத்தில் 5 பேர் தற்போது பலியாகினர். அதன்படி, ஜிரிபாம் மாவட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. மேலும் 4 பேர் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மெய்தெய் பகுதிகளில் நடந்த […]
சென்னை : இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை தங்கள் பகுதிகளில் வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். இந்நிலையில், வருடம் வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வித்தியாசமான விநாயகர் சிலைகள் செய்வது உண்டு. அதிலும் குறிப்பாக, அந்த ஆண்டுகளில் எந்தெந்த படங்கள் பெரிய படமாக இருக்கிறதோ அந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்களையும் சிலையாக செய்வது உண்டு. மேலும் சில இடங்களில் பெரிய பெரிய […]