செய்ப்பூர் : ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தின், பாண்டிகுய் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி, அருகில் இருந்த 35 அடி மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் மீட்புப்படையினரை வரவைத்து மீட்பு பணியை துரித படுத்தினர். ஆனால், மழை காரணமாக, மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருந்தாலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் கடந்த 18 மணி நேரமாக ஈடுபட்டனர். சிறுமியை மீட்கும் முயற்சி […]
டெல்லி : விண்வெளி துறையில் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. சந்திரயான் 3-ஐ தொடர்ந்து, இஸ்ரோ நிலவில் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை மேற்கொள்ள சந்திரயான்-4 விண்கலம் மூலம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய பின், பூமிக்கு மீண்டும் வருவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிரூபிப்பதற்காகவும் சந்திரயான்-4 என பெயரிடப்பட்ட இரண்டு முக்கிய விண்வெளிப் பயணங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. நிலவில் இருந்து பாறைகள் மற்றும் மண்ணை பூமிக்கு கொண்டு […]
காஷ்மீர் : ஜம்மு – காஷ்மீர் சட்டசபை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 11. 11 சதவீத வாக்குகள் பதிவானது. இதை தொடர்ந்து, 11 மணி நிலவரப்படி 26.72 சதவீத வாக்குகளும், தற்பொழுது பிற்பகல் 1 மணி நிலவரப்படி 41.17% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில், அதிகப்டசமாக, கிஷ்த்வாரில் 56.86% வாக்குகளும், குறைந்தபட்சமாக புல்வாமாவில் 29.84% வாக்குகளும் பதிவாகியுள்ளன. Jammu and Kashmir 1st […]
காஷ்மீர் : ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், காஷ்மீரில் 16 தொகுதிகளுக்கும், ஜம்முவில் 8 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் 219 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 7 மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் 3276 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்குகளை செலுத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு தொடங்கிய 4 மணி நேரத்தில் (காலை 11 மணி நிலவரப்படி) 26.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் […]
காஷ்மீர் : கடந்த 2019இல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அது முன்னர் வரையில் ஜம்மு காஷ்மீரில் நடைமுறையில் இருந்த 6 ஆண்டுகள் பதவிக்காலமானது, பின்னர் வழக்கமான 5 ஆண்டுகால ஆட்சி முறையாக மாறியது. இந்த நடைமுறைக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் சட்டசபை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் தொடங்கியுள்ளது. அதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரில் கடைசியாக 2014இல் தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இன்று 24 தொகுதிகளுக்கு தேர்தல் […]
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்த டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜிரிவால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீனில் வெளியே வந்தார். இருந்தும், டெல்லி மாநில முதல்வர் பதவியை தொடர முடியாத வண்ணம் உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்தது. இதனைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும், புதிய முதல்வராக ஆம் ஆத்மி மூத்த நிர்வாகியும், டெல்லி அமைச்சருமான அதிஷியை முன்மொழிந்தார் கெஜ்ரிவால். இன்னும் […]
டெல்லி : கடந்த சில தினங்களுக்கு முன்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களின் டெல்லி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்தில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வில் பிரதமர் கலந்து கொண்டது பேசுபொருளாக மாறியது . இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு மூத்த வழக்கறிஞர்களும் நாட்டின் பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டிற்கு தனிப்பட்ட […]
கொல்கத்தா : கடந்த மாத (ஆகஸ்ட்) தொடக்கத்தில் ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுதுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. பின்னர் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் மற்ற இடங்களில் போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன. ஆனால், சம்பவம் நிகழ்ந்த கொல்கத்தாவில் இன்னும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாமானிய […]
டெல்லி : டெல்லி முதல்வர் பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்யவுள்ளார். இதனால், டெல்லியின் புதிய முதல்வராக மூத்த கல்வி அமைச்சர் அதிஷி மார்லெனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் தற்போது நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிஷி மார்லெனா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். […]
டெல்லி : மதுபான வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டிருந்த மாநில டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதனால், ஜாமீன் வழங்கினாலும், டெல்லி முதல்வர் பதவியை தொடர முடியாத அளவுக்கு பல்வேறு நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்தது. அதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியையே ராஜினாமா செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த […]
டெல்லி : மத்தியிலும், மாநில சட்டமன்றத்திலும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் விதமாக, “ஒரே நாடு ஒரே தேர்தல்” எனும் திட்டத்தை நாட்டில் அமல்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது. இதே திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக கடந்த முறை அதனை முக்கிய வாக்குறுதியாக தேர்தல் அறிக்கையாகயில் குறிப்பிட்டது. தேர்தலுக்கு பின்னர் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தான் வகித்து வரும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து யார் அடுத்த டெல்லி மாநில முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்ற கேள்வி, தற்போது டெல்லி மட்டுமல்லாது தேசிய அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கில் […]
ஓணம் : கேரளாவில் மக்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தான் ஓணம் பண்டிகை. இந்த பண்டிகை அதிகமாக கொண்டாடப்படுவது கேரளாவில் என்றாலும் கொண்டாடும் விதம் உலகம் முழுவதும் உள்ள மக்களை வெகுவாக கவர்ந்துவிடும் என்றே கூறலாம். அந்த அளவுக்கு பெரிய பெரிய வண்ணப்பூ கோலங்கள் போட்டுகொண்டு யானைகள் அலங்கரிக்கப்பட்டு நடனத்துடன் மகிழ்ச்சியாக அவர்கள் ஓணத்தை கொண்டாடுவதை பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அது ஒரு பக்கம் இருக்க மற்றோரு பக்கம், இந்த பண்டிகைக்கு […]
டெல்லி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சுவாச பிரச்சனை காரணமாக, கடந்த ஆகஸ்ட் 19இல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி […]
சென்னை : நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்ற சிறுகுறு தொழிலதிபர்கள், ஹோட்டல் அதிபர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோரும் முக்கிய பங்கேற்பாளர்களாக கலந்துகொண்டனர். ஸ்வீட் – காரம் ஜி.எஸ்.டி : அப்போது ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்னபூர்ணா சீனிவாசன் பேசுகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உணவுப்பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரிகள் பற்றி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தார். “ஸ்வீட்டுக்கு 5%, காரத்திற்கு கூடுதல் வரி, ப்ரெட், பன்-களுக்கு […]
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று காரணமாக, கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 3.05 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, நேற்றைய தினமே மறைந்த சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. கற்பித்தல், ஆராய்ச்சி நோக்கத்துக்காக உடலை அவரது குடும்பத்தினர் […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலில் அமலாக்கத்துறையினர் கைது செய்து இருந்தனர். அடுத்ததாக இதே வழக்கில் சிபிஐ விசாரணை குழுவினரும் கைது செய்தனர். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில், கெஜ்ரிவாலுக்கு முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தாலும், சிபிஐ வழக்கில் அவர் கைதாகி இருந்ததால் கெஜ்ரிவால், டெல்லி திகார் சிறையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கில் ஜாமீன் […]
திருப்பதி : மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் லாரி ஒன்று தக்காளிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, சந்திரகிரி – திருப்பதி இடையே உள்ள பாக்கராப்பேட்டை மலை பாதையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் வந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவத்தில் லாரி கார் மீது மோதியதால் கார் நொறுங்கவும் செய்தது. இதன் காரணமாக, காரில் இருந்த 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உடல் நசுங்கி […]
டெல்லி : இந்திய அரசாங்கம் பணவீக்கம் மற்றும் வேலை பற்றாக்குறை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா-உக்ரைன் போர் இந்தியாவின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் இந்த போர், ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் நடந்தாலும் கூட உலக அளவில் உள்ள பொருளாதார சங்கிலியை பாதித்துள்ளது. அதிலும், குறிப்பாக எரிசக்தி சந்தைகளில், இந்தியாவின் இறக்குமதி மற்றும் பணவீக்கத்தை கணிசமாகப் பாதித்துள்ளது. இது போன்ற இடையூறுகள் இருந்தபோதிலும் கூட […]
டெல்லி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆக.19ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமடைந்தது. தொடர்ந்து, வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் செய்தியை பகிர்ந்து […]