உச்சநீதிமன்றத்தில் சிவசேனா புதிய மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனால் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரியும்,நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியும் தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.இந்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில் தற்போது புதிய மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதாவது உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தாக்கல் செய்த புதிய மனுவில் , நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வரை பட்னாவிஸ் எந்த கொள்கை முடிவும் எடுக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்ற பட்னாவிஸ் நேற்று விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…