கர்நாடகாவை சேர்ந்த மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் அரசுக்கு ஆதரவான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததால் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜக கூட்டணி கவிழ்ந்தது.
இதனால் எடியூரப்பா தலைமையிலான பாஜக கட்சி ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து கொண்டு ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.பின் கர்நாடக முதல்வராக எடியூரப்பா 4 வது முறையாக பதவி ஏற்றார்.மேலும் நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார் எடியூரப்பா.
இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் . காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 11 பேர் ,மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் 3 பேரும் தகுதி நீக்கம் செய்தார் கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார்.ஏற்கெனவே 3 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆக ஆனது.தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் 2023 மே 15 வரை தேர்தலில் போட்டியிட முடியாது.கர்நாடகாவில் 17 பேர் தகுதி நீக்கத்தால் 224 எம்எல்ஏக்களை கொண்ட பேரவையின் பலம் 207ஆக குறைந்துள்ளது.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…