karnataka petrol - disel[file image]
பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தியுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை முறையே 29.84% மற்றும் 18.44% என அரசாங்கம் திருத்தியுள்ளது.
தற்பொழுது, இந்த பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி உயர்வால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 மற்றும் டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது. இதனால், பெங்களூருவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.84 ஆக இருந்து ரூ.102.84 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், டீசல் விலையும் ரூ.3.02 அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.93 ல் இருந்து ரூ.88.95 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என அம்மாநில நிதித்துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்கள் மீதான விற்பனை வரியை அம்மாநில அரசு திருத்தியமைத்துள்ளதால், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் முடிந்து ஜூன் 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…