ஓய்ந்தது பீகார் பிரச்சாரம்… இறுதி கட்ட தேர்தல் நாளை தொடங்குகிறது…

Default Image

பீகார் மாநிலத்தில்  நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி தற்போது முடிவடைவதால், அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

ஏற்கனவே கடந்த 28-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. தற்போது 2-ம் கட்ட தேர்தல், நாளை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்த பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி 4 பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசினார். இதேபோல், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி, கிரிராஜ்சிங், அனுராக் தாக்குர், பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.இதேபோல் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, 2-ம் கட்ட தேர்தலுக்காக 2 கூட்டங்களில் பேசினார். இதேபோல், தேஜஸ்வி யாதவ், கடந்த 28-ந் தேதியில் இருந்து தினமும் 10-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசி வந்தார். இவர்களது இந்த தீவிர பிரச்சாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பீகாரில், 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வரும் 7-ந் தேதி சனிக்கிழமை நடக்கிறது. இதன் வாக்கு எண்ணிக்கை 10-ந்தேதி செவ்வாய் கிழமை  நடக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
csk dhoni
Chennai Super Kings vs Punjab Kings ipl
retro
Chennai Super Kings vs Punjab Kings
ramadoss