அகமதாபாத் விமான விபத்து – இன்று கூடுகிறது உயர்மட்டக்குழு!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 80 பேரின் உடல்கள் DNA பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.

plane crash news

அகமதாபாத் :  விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த விமான விபத்து இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜூன் 12 அன்று, அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் செல்லும் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171, போயிங் 787-8 ட்ரீம்லைனர்) புறப்பட்ட சில நிமிடங்களில் மேகனிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் பிற்பகல் 1:17 மணிக்கு புறப்பட்டு, 1:38 மணியளவில் இருந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட மொத்தம் 242 பேர் பயணித்தனர். இவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் குடிமக்கள், ஒரு கனடியர், மற்றும் 7 போர்ச்சுகீசியர்கள் அடங்குவர். இந்த பயங்கர விபத்தில் முதற்கட்டமாக விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்தவர்களில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்கிற தகவல் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து விசாரிக்க, மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இன்று (ஜூன் 16, 2025) கூடி, விபத்துக்கான காரணங்களை ஆராயவுள்ளது. இதில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். குழு, விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகளை ஆய்வு செய்து, விமானிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தும். விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உயர்மட்டக்குழு, எதிர்காலத்தில் விமான விபத்துகளைத் தடுக்க நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) உருவாக்குவது குறித்து ஆலோசிக்கும். விமான நிலையங்களில் தொழில்நுட்ப மேம்பாடு, விமானிகளுக்கு கடுமையான பயிற்சி, மற்றும் விமான பராமரிப்பு தரத்தை உயர்த்துவது போன்ற பரிந்துரைகள் விவாதிக்கப்படலாம். இந்தியாவில் விமானப் பயணம் வேகமாக அதிகரித்து வருவதால், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கைகள் முக்கியமாகும். குழு விரைவில் தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 80 பேரின் உடல்கள் DNA பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், 33 உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்