2nd phase polling [File Image]
Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணி அளவில் தொடங்கியது. வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதில் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1.67 லட்சம் வாக்குச்சாவடிகளில், மொத்தம் 15.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 8.08 கோடி பேர் ஆண் வாக்காளர்கள், 7.8 கோடி பேர் பெண் வாக்காளர்கள் மற்றும் 5,929 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
அண்டை மாநிலமான கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரண்டாம் கட்ட தேர்தலில் ராகுல் காந்தி, ஹேமமாலினி, சசி தரூர், குமாரசாமி, நடிகர் சுரேஷ்கோபி ஆகிய முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கடந்த வாரம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடைந்த நிலையில், இன்று 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கான தேர்தல் தொடங்கியிருக்கிறது.
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…