6 ஆண்டுகளில் 6 கோடி வேலைவாய்ப்புகள்..  பிரதர் மோடி தகவல்.!

Published by
மணிகண்டன்

சென்னை:  கடந்த 6,7 ஆண்டுகளில் 6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என பிரதர் மோடி பேட்டியளித்துள்ளார்.

மக்களவை தேர்தல் இறுதிகட்டத்தை எட்டி வருவதால் அரசியல் தலைவர்களின் பிரச்சாரமும் முன்பை விட தற்போது தீவிரமடைந்து உள்ளது. பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் எதிர்கட்சிகள் மீதான விமர்சனங்கள் குறித்தும் பேசுவது போல , தனியார் ஊடகங்களிலும் பேட்டிகள் வாயிலாக தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி.

தனியார் செய்தி நிறுவனமான NDTV செய்தி தளத்திற்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடி பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார்.  அவர் கூறுகையில், தனது அரசாங்கத்தின் கீழ் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான பல புதிய வழிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இளைஞர்களிடையே ஏற்படும் மாற்றங்களை எதிர்கட்சிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை. 2014-க்கு முன் நூற்றுக்கணக்கில் தான் ஸ்டார்ட்அப் (சிறுகுறு தொழில் நிறுவனங்கள்) மட்டுமே இருந்தன. ஆனால், இப்போது 1.25 லட்சம் நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு ஸ்டார்ட்அப்பிலும் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த சிறுகுறு நிறுவனங்கள் மூலம் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிகம் நடைபெறுகிறது. இதில் பயனடைந்தவர்கள் பெரும்பாலும் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அதே போல விளையாட்டு துறையிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தத் துறையில் இந்தியா முன்னணியில் இருக்கும். 20 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக இருப்பார் என்றும் பிரதமர் மோடி கூறினார். அடுத்ததாக வளர்ந்து வரும் மற்றொரு துறை, பொழுதுபோக்குத்துறை. இதில், இந்திய படைப்பாளிகள் உலக சந்தையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டுவார்கள் என்று உறுதியாக நம்புவதாக பிரதமர் மோடி கூறினார்.

வேளாண்துறையிலும் வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. விமானத் துறையில்,முன்னர்  70 விமான நிலையங்கள் இருந்தன, இப்போது 150 விமான நிலையங்கள் உள்ளன. நாட்டில் மொத்தம் 600-700 விமானங்கள் உள்ளன. மேலும் 1,000 புதிய விமானங்கள் இந்தியாவில் பறக்க உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விமானத்துறை எப்படி இருந்தது என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். கடந்த 6,7 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் பல்வேறு துறைகளில் 6 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக PLFS தரவு கூறுகிறது என்று பிரதமர் மோடி பேட்டியில் குறிப்பிட்டு பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

53 minutes ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

5 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

12 hours ago