பாஜக வெற்றி விழா.! அயராத உழைப்பு – ஜேபி நட்டா… எங்கள் அதிர்ஷ்டம் பிரதமர் மோடி.!

Published by
மணிகண்டன்

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நேற்று 4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது 3 மாநிலங்களிலும் காங்கிரசை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து இருந்தாலும், கடந்த முறை ஒரே ஒரு தொகுதியை வென்று இருந்த பாஜக இந்த முறை தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்று வாக்கு சதவீதத்தையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3 மாநில தேர்தல் வெற்றியை பாராட்டும் விதமாக, நேற்று டெல்லியில் பாஜக அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்துகொண்டார். அதில் பேசிய பிரதமர் மோடி , தேசிய தலைவர் ஜேபி.நட்டாவை வெகுவாக பாராட்டினார்.

தெலுங்கானா தேர்தல் ஹைலைட்ஸ்… ஆட்சி கோரும் காங்கிரஸ்.! முன்னேறிய பாஜக.!

அவர் கூறுகையில், நீதி துறையிலும்,  அமைச்சராக பொறுப்பில் இருந்த போதும்ம், ஜேபி.நட்டா சிறப்பாக பங்காற்றி வந்தார். அதே போல ஒரு கட்சி தலைவராகவும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.  தேர்தலுக்கு முன்பாக அவரது குடும்பத்தில் ஒரு துயரம் நிகழ்ந்தது. ஆனால் அதனை கூட பொருட்படுத்தாமல், அவர் கட்சிக்காக தொடர்ந்து பாடுபட்டார்.

இந்த வெற்றிகள் நமது தேசியத் தலைவர் நட்டா-ஜியின் அயராத உழைப்பால் கிடைத்தவை. அவர் நடைமுறைப்படுத்திய உத்திகள்தான் இன்றுவரை நம்மை வழிநடத்திச் சென்றுள்ளது. கட்சிக்காக முழு அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் செயல்பட்டு வருகிறார். இனியும் இந்த பணியை சிறப்பாக செய்யுங்கள் என்று பிரதமர் மோடி பாராட்டினார்.

இதனை அடுத்து பேசிய தேசிய தலைவர் ஜேபி.நட்டா, நாட்டில் தற்போது செயல்படுத்தப்படும் ஒரே உத்தரவாதம் என்றால் அது பிரதமர் மோடியின் உத்தரவாதம் மட்டுமே. பிரதமர் நரேந்திர மோடிஜியின் தலைமையில் நாங்கள் சரிவுகளில் இருந்த காலத்திலும், பல வெற்றிகளைப் பெற்ருள்ளோம். பிரதமர் மோடியை எங்களது அதிர்ஷ்டமாக கருதுகிறோம்.

மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றதற்கு அவருக்கு நாங்கள் முழு மனதுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பாஜக தேர்தலில் போட்டியிட்ட போதெல்லாம், பிரதமர் மோடி எப்போதும் முன்னணியில் வந்து எங்களை வழிநடத்தினார். பெண்களுக்கு அதிகாரமளித்தல், இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவது என எதுவாக இருந்தாலும், பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. மோடி எதையும் சாத்தியமாக்குவார் என மக்கள் நம்புகிறார்கள் என்பது தெளிவாகிறது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார்.

Recent Posts

டிரம்பை கொல்ல திட்டம்? ஸ்கெட்ச் போட்ட ஈரான்..உண்மையை உடைத்த இஸ்ரேல்!

இஸ்ரேல் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.  ஜூன் 13…

7 minutes ago

“இங்கிலாந்தை வீழ்த்த எங்க கேப்டன் கில் ரெடியா இருக்காரு” குல்தீப் யாதவ் பேச்சு!

லீட்ஸ் : சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில், அடுத்ததாக யார் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின்…

2 hours ago

திக் திக்கை ஏற்படுத்தும் காந்தாரா! விபத்தில் உயிர் பிழைத்த நடிகர் ரிஷப் ஷெட்டி!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.…

3 hours ago

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு!

டெல்லி : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசியத் தலைவருமான சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில்…

4 hours ago

அகமதாபாத் விமான விபத்து – இன்று கூடுகிறது உயர்மட்டக்குழு!

அகமதாபாத் :  விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த விமான விபத்து இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜூன் 12 அன்று,…

4 hours ago

ஈரான் தலைவர் கமேனியை கொல்ல திட்டம்? டிரம்ப் தடுத்து நிறுத்தினாரா?

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் ஈரானின் உச்ச…

4 hours ago