மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் மார்ச் 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதலில் பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னரும் தீவிரம் குறையாத நிலையில் 2-ஆம் கட்டமாக ஊரடங்கு மே 3-ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு மூன்றாம்கட்டமாக நீட்டிக்கப்பட்டது.
இதற்குஇடையில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்கள்,மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டார். தற்போது ஊரடங்கு மே 17-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.இந்நிலையில் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் .மாநில முதலமைச்சர்களுடன் 5வது முறையாக மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஊரடங்கு தளர்வால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்தும், பொருளாதார நடவடிக்கைகளை குறித்தும் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!
July 21, 2025