ரயிலில் தப்பிச்சென்ற திருடனை பிடிக்க விமானத்தில் பறந்த போலீசார்.!

Published by
murugan

மேற்கு வங்காளத்தின் பர்த்வான் நகரைச் சேர்ந்த கைலாஷ் தாஸ், இவர் பெங்களூரில் உள்ள ஜே.பி.நகரில் பில்டர் ராஜேஷ் பாபுவின் வீட்டில் ஆறு ஆண்டுகள் வேலை செய்து, அங்கு அடித்தளத்தில் ஒரு குடிசையில் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு, பாபுவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அக்டோபர் 9-ஆம் தேதி, பாபுவின்  குடும்பதினர் கொரோனா நோயாளியை கவனித்துக்கொள்வதில் மும்முரமாக இருந்தபோது, தாஸ் ரூ .1.3 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருடி கொண்டு மைசூருவுக்கு தப்பிச் சென்றதாக தெரிவித்தனர்.

மைசூருவில் உள்ள ஒரு லாட்ஜில் சில நாட்கள் தங்கியிருந்த தாஸ், பின்னர் அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்து மீண்டும் பெங்களூருக்கு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர்  ஹவுராவுக்கு ரயிலில் ஏறினார் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, ரயில் நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை  ஆய்வு செய்தனர். அப்போது, யாஸ்வந்த்பூரில் தாஸ் ரயிலில் ஏறுவதை அவர்கள் கவனித்தனர். பின்னர், ரயில் ஹவுரா ரயில் நிலையத்தை அடைவதற்குள் தாஸைக் கைது செய்வதற்காக கொல்கத்தாவுக்கு விமானம் மூலம் பறக்க போலீசார் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, ஹவுரா ரயில் நிலையத்தில் காவல்துறையினரைக் கவனித்த தாஸ் தப்பிக்க முயன்றார். ஆனால், தாஸை போலீசார் கைது செய்து பாதுகாப்பாக பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டார் என்று அதிகாரி கூறினார்.

Published by
murugan

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

2 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

3 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

5 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

5 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

6 hours ago