வாட்ஸ்அப் மூலம் பெண்ணை துன்புறுத்தி வந்த காவலர் கைது.!

Published by
Ragi

ஹைதராபாத்தில் பெண் ஒருவரை வாட்ஸ்அப் மூலம் துன்புறுத்தி வந்த கான்ஸ்டபிள் ஒருவரை பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் கைது செய்தனர்.

ஹைதராபாத்தில் உள்ள புஞ்சகுட்டா காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் வீரபாபு. இவர் முதல்வர் முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியாளராகவும் பணியாற்றியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு, பெண் ஒருவர் முதல்வர் முகாம் அலுவலகம் வரை செல்வதற்கு வீரபாபுவிற்கு லிப்ட் கொடுத்துள்ளார். அப்போது பெண்ணின் மொபைல் நம்பரை எடுத்து கொண்ட வீரபாபு, அதனையடுத்து தினமும் மெசேஜ்களையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் வாட்ஸ்-அப்பில் அந்த பெண்ணிற்கு அனுப்பி துன்புறுத்தி உள்ளார்.

அந்த பெண்ணும் பலமுறை தன்னை துன்புறுத்தல் செய்யாதீர்கள் என்று கேட்டுள்ளார். ஆனாலும் தொடர்ந்து வீரபாபு பல மெசேஜ்களை அனுப்பியுள்ளார். இதனை சகிக்க முடியாமல் அந்த பெண் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் வீரபாபு மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பஞ்சாரா ஹில்ஸ் போலீசாரால் வீரபாபு கைது செய்யப்பட்டார்.

Published by
Ragi

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

3 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

4 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

4 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

5 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

5 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

6 hours ago