5ஆம் கட்ட மக்களவை தேர்தல்… 8 மாநிலங்கள், 49 தொகுதிகள்…

Published by
மணிகண்டன்

சென்னை: மக்களவை தேர்தல் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.

நாட்டில் உள்ள 543 தொகுதிகளுக்குமான நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 4 கட்ட வாக்குபதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நாளை (மே 20), 25, ஜூன் 1ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

நாளை (மே 20), 5ஆம் கட்ட தேர்தலானது 8 மாநிலங்களில் மொத்தம் 49 தொகுதிகளில் மட்டும் நடைபெறுகிறது. வழக்கம்போல, நாளை காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுபெறும். இதில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

உத்திர பிரதேசம் ரேபரேலியில் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, லக்னோவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிரா மும்பை வடக்கு தொகுதியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் இந்த தேர்தலில் களம் காணும் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவார்.

8 மாநிலங்கள்… 49 தொகுதிகள்…

உத்திர பிரதேசம் – 14 தொகுதிகள். மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இதுவரை 39 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.

மஹாராஷ்டிரா – 13 தொகுதிகள். மொத்தமுள்ள 48 தொகுதிகளில் இதுவரை 35 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.

மேற்கு வங்கம் – 7 தொகுதிகள்.மொத்தமுள்ள 42 தொகுதிகளில் இதுவரை 18 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.

பீகார் – 5 தொகுதிகள். மொத்தமுள்ள 40 தொகுதிகளில் இதுவரை 19 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.

ஒடிசா – 5 தொகுதிகள். மொத்தமுள்ள 21 தொகுதிகளில் இதுவரை 4 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.

ஜார்கண்ட் – 3 தொகுதிகள். மொத்தமுள்ள 14 தொகுதிகளில் இதுவரை 4 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் – 1 தொகுதி. மொத்தமுள்ள 5 தொகுதிகளில் இதுவரை 4 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.

லடாக் – ஒரே ஒரு தொகுதிக்கும் நாளை (மே 20) தேர்தல் நடைபெற உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

7 seconds ago

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

1 hour ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

2 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

3 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

4 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

5 hours ago