கேரளாவில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 10 மற்றும் +2 வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள் ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளாவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 10 மற்றும் +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு, வரும் 17 முதல் 30 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்பொழுது கேரளாவில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொதுத்தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்று அரசிற்கு அம்மாநில ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்தது.
இதுதொடர்பான முடிவை தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும் என்பதால், தேர்வுகளை தள்ளிவைக்க அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைதொடர்ந்து தேர்தல் ஆணையம், 10 மற்றும் +2 வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க அனுமதி அளித்துள்ளது.
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…