பாஜகவுக்கு எதிராக 16 முதலமைச்சர்களும் ஒன்று சேருங்கள்! தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர் அதிரடி கருத்து!

Published by
மணிகண்டன்
  • இந்தியாவின் தேர்தல் வித்தகர் என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் தற்போது பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.
  • 2012-ல் நரேந்திர மோடியுடன் இணைந்து குஜராத் தேர்தலில் ஜெயிப்பதற்கான யுக்திகளை வகுத்துக்கொடுத்தவர்.

தமிழகத்தில் இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேர்தலில் ஜெயிப்பதற்காக பல வியூகங்களை வகுத்து கொடுத்து இந்திய தேர்தலில் முக்கிய பங்காற்றியவர் பிரசாந்த் கிஷோர். இவரை தேர்தல் வித்தகர் என பல கட்சி தலைவர்களும் அழைக்கின்றனர். இவர் 2012ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற இடைத்தேர்தலில் மோடியுடன் இணைந்து பிஜேபி ஜெயிப்பதற்காக தேர்தல் யுக்திகளை வகுத்து கொடுத்தார். அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு பாஜக ஜெயிப்பதற்காக அதிதிலும் முக்கிய பங்காற்றினார்.

பின்னர், தேர்தல் வியூகங்களை வகுப்பதில் பிஸியான பிரசாந்த் கிஷோர். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற உதவினார். மேலும் பஞ்சாப், ஆந்திரா, மேற்கு வங்கம் என பல முக்கிய தேர்தல்களிலும் தேர்தல் யுக்திகளை பகிர்ந்து கொடுப்பதில் முக்கிய புள்ளியாக வலம் வந்தார் பிரசாந்த் கிஷோர்.

இவர் பீகாரில் நிதேஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஐக்கிய ஜனதா தளம் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை ஆதரிக்கும் வண்ணம் செயல்பட்டு வருவதால், தற்போது அந்த கட்சியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார். இதனால்  இந்திய அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

அடுத்த ஆண்டு பீகார் மாநில தேர்தல் வர உள்ளதால், தற்போது பிரசாந்த் கிஷோர் அந்த கட்சியில் இருந்து வெளியேறி உள்ளது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இவர் அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் குடியுரிமை பதிவேடு சட்டத்திற்கும் எதிராக டிவிட்டரில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்ற பிஜேபி அல்லாத 16 முதலமைச்சர்களும் ஒரு அணியில் சேர வேண்டும் என கருத்து தெரிவித்தார். இந்த கருத்து  இந்திய அரசியல் வட்டாரத்தில் தற்போது புயலை கிளப்பியுள்ளது. மேலும், இன்னொரு பதிவில் தேசிய குடியுரிமை பதிவேடு சட்டமானது பணமதிப்பிழப்பு போல் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மோடியுடன் இணைந்து பாஜக ஜெயிப்பதற்காக தேர்தல் யுக்திகளை வகுத்து அதன் பின்னர், ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்து கொண்டு, அதனை அடுத்து அக்கட்சி நிலைப்பாடு பிடிக்கவில்லை என அக்கட்சியில் இருந்து விலகி, தற்போது பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார் தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பால் வேண்டும், மோர் வேண்டும் ஆனா… “கால்நடை மனநிலை” பற்றி சீமான் பேச்சு!

பால் வேண்டும், மோர் வேண்டும் ஆனா… “கால்நடை மனநிலை” பற்றி சீமான் பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…

6 minutes ago

ரொம்ப பேசுது அபராதம் போடணும்! Grok மீது போலாந்து அமைச்சர் புகார்!

வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…

36 minutes ago

INDvsENG : “ஆரம்பே அமர்க்களம்”..இங்கிலாந்தை திணற வைத்த நிதிஷ் குமார் ரெட்டி!

லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…

2 hours ago

அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…

3 hours ago

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

3 hours ago

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மாதிரி விஜய் அரசியல் செய்யணும்- ரோஜா அட்வைஸ்!

திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…

4 hours ago