டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் முதலிடம்.. உலக அளவில் பிரதமர் மோடிதான் டாப்!

Published by
பாலா கலியமூர்த்தி

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 கோடியாக (70 மில்லியன்) அதிகரித்துள்ளது. 

உலகளவில் அரசியலில் தற்போது உள்ள தலைவர்களில் அதிகமாக பின்தொடர்வோர் எண்ணிக்கையில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருக்கிறார். கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் சமூகவலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் கணக்கை தொடங்கிய பிரதமர் மோடி, சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்படும் தலைவரானார்.

இதன்பின் படிப்படியாக அவரை ட்விட்டரில் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமரை பின்தொடர்வோர் எண்ணிக்கை 6 கோடியை (60 மில்லியன்) நெருங்கியது. இந்த நிலையில், இவ்வாண்டு 2021 மேலும் அதிகரித்து, பிரதமர் மோடியின் கணக்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 கோடியை (70 மில்லியன்) தாண்டியுள்ளது.

இதனால் உலகளவில் தற்போது உள்ள தலைவர்களில் ட்விட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். இந்திய பிரதமரை தொடர்ந்து, போப் பிரான்சிஸ் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 5.30 கோடி ( சுமார் 50 மில்லியனுக்கு மேல்) உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 3.90 கோடியாக உள்ளது.

இதனைத்தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 2.63 கோடி (26.3 மில்லியன்) பேரும், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி கணக்கை 1.94 கோடி (19.4 மில்லியன்) பேரும் பின்தொடர்கின்றனர்.

இதுபோன்று, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ட்விட்டர் கணக்கை 12 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். அதேபோல், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கணக்கை 8.87 கோடி பேர் பின்தொடர்ந்தாலும் ட்ரம்ப் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

32 minutes ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

1 hour ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

6 hours ago