பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர் – ஆளுநர் சத்ய பால் மாலிக்..!

Published by
murugan

500 விவசாயிகள் எனக்காகவா இறந்தார்கள்..? என பிரதமர் கேட்டதாக மேகலாய ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் தாத்ரியில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய மேகலாய ஆளுநர் சத்தியபால் மாலிக், விவசாயிகள் பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்தித்தபோது ​​ஐந்து நிமிடங்களில் அவருடன் சண்டையிட்டேன் என கூறினார். அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்ததாகவும், அப்போது விவசாய சட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க சென்றபோது அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு 5 நிமிடங்களில் சண்டையிட்டதாக கூறினார்.

பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர். நான் அவரிடம் நம்முடைய 500 விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள் என்று கூறினேன். அதற்கு மோடி அவர்கள் அனைவரும் எனக்காகவா இறந்தார்கள்..? என்றார். நீங்கள் தான் இந்தியாவின் பிரதமர் எனக் கூறினேன். பின்னர் பிரதமர் அமித் ஷாவை சந்திக்குமாறு என்னிடம் கூறினார். நான் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அவர் ஏதோ பேசிவிட்டார் விடுங்கள் என அமித்ஷா கூறியதாக சத்தியபால் மாலிக் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் சத்ய பால் மாலிக், மூன்று விவசாயச் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தது விவசாயிகளுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற மத்திய அரசு நேர்மையாக செயல்பட வேண்டும். பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் கூறினார்.

தானும் இந்த விவசாய சட்டங்களுக்கு எதிரானவன். விவசாயிகள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அநீதி இழைக்கப்பட்டால் மீண்டும் தொடங்கும் என்றும் மாலிக் கூறினார். விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர் என்று மாலிக் கூறினார்.

எதிர்காலத்திலும் விவசாயிகளுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும் எந்த அரசு எடுத்தாலும் அதை உண்மையாக எதிர்ப்போம் என்றும், பதவியை ராஜினாமா செய்ய சொன்னாலும் பின்வாங்கப் போவதில்லை என்றும் கூறினார். என் பதவிக்கும் முன் விவசாயிகளின் நலன்தான் எனக்கு முக்கியம். விவசாயிகள் தொடர்பான சட்டத்தை அரசு இயற்றும் போது முதலில் விவசாயிகளின் கருத்தையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

எந்தச் சட்டம் இயற்ற வேண்டும் என்றால் அது விவசாயிகளின் நலனுக்காகவும் உருவாக்கப்பட வேண்டும் என்று மாலிக் கூறினார். சில காலமாக அவர் பாஜக அரசாங்கத்தின் மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார். அவர் மேகாலயாவுக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மற்றும் கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

வலுவிழந்தது தாழ்வு மண்டலம்.., ”இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்” – வானிலை அப்டேட்..!

வலுவிழந்தது தாழ்வு மண்டலம்.., ”இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்” – வானிலை அப்டேட்..!

சென்னை : வங்கதேசம், மேற்கு வங்கத்தில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

30 minutes ago

நான்தான் பாமக தலைவர்.! ‘பாமக தனி நபரின் சொத்தும் கிடையாது’ – அன்புமணி திட்டவட்டம்.!

சென்னை : நேற்றைய தினம் அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும்…

53 minutes ago

திலகபாமா நீக்ககிய ராமதாஸ்.., ‘பாமக பொருளாளராக தொடர்வார்’ – அன்புமணி அதிரடி அறிவிப்பு.!

சென்னை : ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் அதிகரித்த நிலையில், திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக இருந்தார். இந்த நிலையில், பாமக…

1 hour ago

ஆர்பிஐ நியூ ரூல்ஸ்: நகைக்கடன் விதிகளை தளர்த்த மத்திய அரசு பரிந்துரை.!

டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் தங்கக் கடன் வாங்குவது தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டது.…

1 hour ago

”கொள்ளையடித்த பணத்தை வண்டி வண்டியா கொட்ட போறாங்க” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…

4 hours ago

தாய்லாந்தில் இந்தியரை தாக்கிய புலி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!

பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…

4 hours ago